உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோடியுடன் பீஹார் முதல்வர் நிதீஷ் குமார் சந்திப்பு

மோடியுடன் பீஹார் முதல்வர் நிதீஷ் குமார் சந்திப்பு

புதுடில்லி: லோக்சபா தேர்தலில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை துவங்க உள்ள நிலையில் பீஹார் முதல்வர் நிதீஷ்குமார், பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.லோக்சபா தேர்தலில் பா.ஜ,., தலைமையிலான தே.ஜ. கூட்டணியில் ஐக்கியஜனதா தளம் உள்ளது. இக்கூட்டணியில் பீஹாரில் 40 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் 17 தொகுதிகளிலும், பா.ஜ., 16 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.இந்த சூழ்நிலையில் இன்று பீஹார் முதல்வர் நிதீஷ்குமார், பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Sai Shriram
ஜூன் 04, 2024 12:13

நிதிஷ் குமார் கடைசி நேரத்தில் இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து விலகி பாஜகவுடன் கூட்டணி அமைத்தார். ஒருவேளை அவர் இந்திய கூட்டணியில் தொடர்ந்திருந்தால், பிரதமராக ஆகி இருக்கலாம். என்ன செய்ய விதி, மோடிக்கு அவர் ஒத்து ஓத வேண்டும். இவர் மோடியை தீவிரமாக எதிர்த்தவர். அடிக்கடி அணி மாறியவர். பாஜக ஆட்சி அமைத்தாலும் நிதிஷ் காலில் கிடக்கவேண்டும். எந்த நேரத்திலும் பாஜகவின் காலை வார தயங்கமாட்டார்.


SUBBU,MADURAI
ஜூன் 04, 2024 08:12

அப்பறம் எப்படி இருக்கீங்க? நம்ம திட்டத்தின் படி நீங்க பாஜக கூட்டணியில இருந்து விலகுவது போல் விலகி புள்ளிக் கூட்டணியை ஆரம்பித்து எதிர்கட்சிகளை எல்லாம் ஒருங்கிணைத்து ஒருவருக்கொருவரின் தனிப்பட்ட பலவீனங்களை எல்லாம் வெளிப்படுத்தி விட்டு கடைசியில் நாம் திட்டமிட்டபடி புள்ளிக் கூட்டணியை முட்டுச் சந்தில் நிறுத்தி விட்டு வந்து விட்டீர்கள் மிகவும் சந்தோஷம் குறிப்பாக நீங்கள் தமிழக முதல்வர் ஸ்டாலினை இந்தியை கற்றுக் கொள்ளச் சொல்லி மிரட்சியடையச் செய்ததுதான் ஹைலைட்.


Mani
ஜூன் 04, 2024 07:36

Good


Kasimani Baskaran
ஜூன் 04, 2024 05:37

பாஜக ஜெயிக்கும் பட்சத்தில் நித்தீஷ்க்கு முக்கிய பதவி காத்திருப்பதாக சொல்லப்படுகிறது. நித்தீஷ் போன்ற திறமைசாலிகள் மந்திரிசபையில் அங்கம் வகித்தால் அது இந்தியாவுக்கு நல்ல பலனை நிச்சயம் கொண்டுவரும்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை