உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பில்கிஸ் பானு வழக்கு: 11 குற்றவாளிகள் விடுதலை செல்லாது; உச்சநீதிமன்றம் தீர்ப்பு

பில்கிஸ் பானு வழக்கு: 11 குற்றவாளிகள் விடுதலை செல்லாது; உச்சநீதிமன்றம் தீர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளை விடுதலை செய்தது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தண்டனையை குறைக்க குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.குஜராத்தில், 2002ல் நடந்த கலவரத்தின் போது, பில்கிஸ் பானு என்ற பெண், ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரது குடும்பத்தினரும் இதில் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட, 11 பேர், சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0yj1vawg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், குஜராத் அரசு இவர்களை கடந்தாண்டு சுதந்திர தினத்தின் போது, முன் கூட்டியே விடுதலை செய்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு குஜராத் மாநில அரசுக்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பி இருந்தது. அப்போது, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள், 14 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பின், எந்த அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்? என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர். இந்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று(ஜன.,08) தீர்ப்பு அளித்தனர்.

விடுதலை ரத்து

அப்போது நீதிபதிகள், பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளை விடுதலை செய்தது செல்லாது என தீர்ப்பு அளித்தனர்.

அதிகாரம் இல்லை

மேலும் நீதிபதிகள் கூறியிருப்பதாவது: வழக்கு மஹாராஷ்டிராவில் நடைபெற்றதால் 11பேரை விடுவிப்பது குறித்து மஹாராஷ்டிரா அரசு தான் முடிவு எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் என்பது மிகவும் முக்கியம். பெண்களின் மரியாதை மிகவும் முக்கியம். பெண்கள் மரியாதைக்குரியவர்கள். தண்டனையை குறைக்க குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை.இவ்வாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 57 )

Kalyanaraman
ஜன 08, 2024 23:17

நம் நாட்டின் முன்னாள் பிரதமரை கொலை செய்தவர்களுக்கு மாநில அரசு விடுதலை செய்தபோது நீதிமன்றங்கள் மெளனியாக இருந்தது ஏனோ??


Anbuselvan
ஜன 08, 2024 23:03

இந்த சட்டங்களை புரிந்து கொள்ளவே முடியவில்லை. நாட்டின் பிரதம மந்திரியாக இருந்தவரை ஈன படுகொலை செய்தவர்களுக்கு அரசின் விடுதலை கொடு என்கிறது. ஈனத்தனமான கற்பழிப்பு வழக்கிற்கு அரசின் விடுதலை செல்லாது என கூறுகிறது. நீதி துறைக்கு தெரியாதது சாமானியனுக்கு தெரியவா போகிறது. சாமானியனுக்கு நியாயம்தான் தெரிந்து இருக்கும் நீதியம் சட்டங்களும் தெரியாது. தெரிந்திருந்தால் ஒவ்வொரு சாமானியனுக்கு சட்ட வல்லுனராக இருப்பர் இப்போது.


Priyan Vadanad
ஜன 08, 2024 21:48

பதினோரு பேர் விடுதலை பெற்றதுக்கு காரணம் அரசுக்கு விசுவாசம். அவர்கள் திரும்பவும் ஜெயிலுக்கு போவதுக்கு காரணம் சட்டத்துக்கு விசுவாசம். அம்புடுதேன்.


தாமரை மலர்கிறது
ஜன 08, 2024 20:33

விடுதலை செய்யப்பட்டது சரியே. தீர்ப்புகள் மாறி மாறி வருவது ஜனநாயகத்திற்கு சரியல்ல. இன்னொரு விசாரணையை கொண்டுவருவது நல்லது.


Rajagopal
ஜன 08, 2024 19:43

குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். சட்டம் ஒழுங்காக வேலை செய்ய வேண்டும். அரசியல்வாந்திகளின் கையில் சட்டம் சீரழியும். கருணாநிதி, அண்ணா பிறந்தநாளை வைத்து, கோவை வெடிகுண்டு சம்பவத்தில் சிறை சென்ற பயங்கரவாதிகளை விடுதலை செய்தான். விடுதலை செய்யும் அதிகாரமும் நீதிமன்றத்தின் கையில்தான் இருக்க வேண்டும்.


Velan Iyengaar
ஜன 08, 2024 20:51

தார்மீகம் முக்கியம்... எந்த அரசாக இருந்தாலும் அவர்கள் எடுக்கும் கொள்கை முடிவுகள் தார்மீக முறையில் அனைவராலும் ஏற்புடையதாக இருக்கவேண்டும்....பெரும் தலைவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு விடுதலை செய்யப்படும் குற்றவாளிகள்... எந்த வகை குற்றம் புரிந்திருப்பினும் .....சமூகத்தில் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்துகுவார்கள் என்பது ... அந்திகிய கொள்கை முடிவு எடுக்கும் அரசுக்கு தெரிந்திருக்க வேண்டும்.....அதை பூரணமாக கண்டறிய வேண்டும்...... இந்த வழக்கை பொறுத்தவரை .... குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை கொடுக்காததே பெரிய குற்றம்.... அரிதிலும் அரிதான .. என்ற வகையறாவில் சுலபமாக சேர்கூடிய குற்றம் இது..... ஐந்து மாத கர்ப்பிணி பெண்.... இங்கு சிறுபாண்மை பெண் என்பது ஒரு பொருட்டே அல்ல....கர்ப்பிணி பெண்...அவளை அவள் உறவினர்கள் முன்னிலையில் கூட்டு கற்பழிக்கப்பட்டு ... பின்னர் அந்த உறவினர்களை கொலை செய்து..... உருப்படிகள் வாழ தகுதி கொண்டவர்களா என்பதே நீதிமன்றங்கள் சீர்தூக்கி இருக்கவேண்டும்....அதிலேயே நீதிமன்றங்கள் சறுக்கியது என்பதே பெரும்பாலான மக்கள் கருத்து இந்த வகை குற்றம் புரிந்த ஈன ஜென்மங்களை தண்டனை காலம் முடியும் முன்னே விடுதலை செய்யும் கட்சிக்கு ஈவு இரக்கம் என்று ஏதாவது உள்ளதா?? இந்த வகை கட்சி... உலக தர்மத்துக்கு உகந்த கட்சியா?? எந்த வகை ஹிந்து தர்ம வேத கோட்பாடுகளுக்கும் உட்பட்ட கட்சியா?? இந்த கட்சி நாட்டின் சாபக்கேடா இல்லையா??


திகழ்ஓவியன்
ஜன 08, 2024 19:04

அனைத்து ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக அலுவலகங்களில் காவி கொடி அரை கம்பத்தில் பறக்கவிட படும்...


திண்டுக்கல் சரவணன்
ஜன 08, 2024 21:53

கோவை குண்டு வெடிப்பில் தண்டனை பெற்றவர்கள் வெளீயில் வரும்போது உங்க கட்சி அரைக்கம்பத்தில் பறக்க விடுமா தண்டனை பெற்ற ஒருவரை ஆரத்தழுவி வரவேற்ற திருமா கட்சி கொடி அரைக்கம்பத்தில் பிறந்ததாக ஞாபகம் இல்லை.


Bala
ஜன 08, 2024 19:03

What about those released in former PM Rajiv Gandhi's assassination case?? How is that different.


Bala
ஜன 08, 2024 19:02

Gujarat Govt is absolutely wrong in releasing these convicts. This should not be encouraged


திண்டுக்கல் சரவணன்
ஜன 08, 2024 21:54

Correct. Even Releasing Rajiv convict also wrong


திகழ்ஓவியன்
ஜன 08, 2024 18:47

இதற்கு காரணம் மஹாபாரதம் ஒரு மனைவி ஐந்து கணவர் அவர்களையே தண்டிக்க வில்லை அப்புறம் இந்த 11 பேரை தண்டிப்பது மனு நீதிப்படி தண்டிப்பது தவறு இல்லையா சாவர்க்கர் போல மண்ணிப்பு கேட்டால் விட்டு விடலாம்


திகழ்ஓவியன்
ஜன 08, 2024 18:31

வாழ்த்துகள்உச்சநீதிமன்றத்திற்கு மனமார்ந்த நெஞ்சார்ந்த வாழ்த்துகள்பல்கீஸ் பானுவிற்கும் குஜாரத் மக்களுக்கும் நிகழ்த்தப்பட்ட அநீதத்திற்கும் இனப்படுகொலைக்கும் முழுமையான நீதி இதுவரை கிட்டவில்லை.எனினும் கடுங்குளிரில் இருட்டில் சிக்கி தவிப்போனுக்கு கிடைத்த தூரத்தில் தெரியும் ஒரு நெருப்பை போன்று பலரின் முயற்சியால் சிலருக்கு கிடைத்த சிறு தண்டனையையும் தங்களின் அதிகாரம் கொண்டு அழித்திட எண்ணியவர்களை தன் தீர்ப்பால் உச்ச நீதிமன்றம் முடக்கியிருக்கிறது.அதற்கான வாழ்த்துகளை உள்ளத்தின் அடியிலிருந்து உரைக்கிறோம்.வாழ்த்துகள்இது குற்றம் செய்வோரை அதிகாரம் துணையோடு அழிச்சாட்டியம் செய்வோரை அச்சுறுத்தும். அடுத்து செய்ய விடாமல் தடுக்கும்.இதை தான் நாகரிக சமுக எதிர்பார்க்கிறது.இதற்காக தான் ஏங்கி நிற்கிறது.


மேலும் செய்திகள்