மேலும் செய்திகள்
ஒடிஷாவில் நீடிக்கும் கனமழை இருவர் பலி; இருவர் மாயம்
2 hour(s) ago
ஆயிரக்கணக்கானோர் உயிர் காத்த கேரள போலீசின் ரத்த வங்கி சேவை
2 hour(s) ago | 1
விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி
2 hour(s) ago
புதுடில்லி: வேளாண் கூட்டுறவு கூட்டமைப்பிலிருந்து கடன் கொடுத்ததில் ரூ. 167 கோடி ஊழல் செய்ததாக வருவாய்த்துறை கமிஷனரை சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர். இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு வாணிப கூட்டமைப்பு என்ற நிறுவனம் (என்.ஏ.எப்.இ.டி). வேளாண்துறையைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்கி வருகிறது. இந்த அமைப்பின் கூடுதல் நிர்வாக இயக்குனராக கடந்த 2005-ம் ஆண்டு பணியாற்றினார் ஆக்ராவைச் சேர்ந்த ஹோமி ராஜ்வனாஷ். இவர் 1985-ம் ஆண்டு வருவாய்த்துறை பணிகள் பிரிவு கேடராக தேர்வானவர். இவரது தனது பதவி காலத்தின் போது உரிய அனுமதி இன்றியும், உத்தரவாதம் இன்றியும் பல்வேறு வேளாண் , விவசாயம் சார்ந்த நிறுவனங்களுக்கு முறைகேடாக கடனுதவி வழங்கியதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. இதில் நடந்த விசாரணையில் ரூ.167 கோடி மோசடி நடந்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து ஹோமி ராஜ்வனாஷ் மற்றும் சில ஊழியர்கள் உள்பட 4 பேரை சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர்.
2 hour(s) ago
2 hour(s) ago | 1
2 hour(s) ago