மேலும் செய்திகள்
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
1 minutes ago
மாநில பொறுப்பாளரை புலம்ப விட்ட தி.மு.க.,வினர்
4 minutes ago
காசு வைத்து சூதாடிய ஐந்து பேர் கைது
12 minutes ago
லே: இந்திய எல்லைக்குள் சீன ராணுவப்படையினர் அத்துமீறி நுழைந்து இந்திய-சீன எல்லைப்பகுதியில் உள்ள இந்திய ராணுவ முகாமினை சேதப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. இந்திய-திபெத் எல்லை கட்டுப்பாட்டுப்பகுதியில் உள்ள லே பகுதியிலிருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள நையோபா செக்டரர் எல்லைப்பகுதி இந்திய-திபெத் மற்றும் சீன எல்லைப்பகுதியாகும். இந்த எல்லையில் சீனா ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்துள்ளனர். மேலும் இங்குள்ள மிகவும் பழமையான இந்திய எல்லையை கண்காணிக்கும் முகாம்கள் மற்றும் பதுங்கு குழிகள் உள்ளன. இவற்றினை சேதப்படுத்தியுள்ளனர்.இது குறித்து வடக்குப்பகுதியின் உதாம்பூரைச் சேர்ந்த ராணுவ செய்தி தொடர்பாளர் கர்னல் ராஜேஷ் கூறுகையில், நேற்று முன்தினம் இதே போன்று லே பகுதியின் சூமோர் என்ற இடத்தில் சீன ஹெலிகாப்டர் அனுமதியின்றி தரையிறங்கியது. சீனாவி்ன் இந்த அத்துமீறிய செயல் இரண்டாவது முறையாகும். இதே போன்று கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை மாதம் , மெளன்ட் கயாக பகுதியில் அத்துமீறி நுழைந்துள்ளது என்றார்.
1 minutes ago
4 minutes ago
12 minutes ago