உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரயில் நிலையத்தில் டெட்டனேட்டர் மூடைகள்

ரயில் நிலையத்தில் டெட்டனேட்டர் மூடைகள்

மும்பை: மஹாராஷ்டிரா மாநிலத்தில் ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த டெட்டனேட்டர் மூடைகள் பதற்றத்தை ஏற்படுத்தின.மஹாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் கல்யாண் ரயில் நிலையம் உள்ளது. எப்போதும் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும் இந்த ரயில் நிலைய 1-வது பிளாட்பாரத்தில் இரண்டு மூடைகளில் 50-க்கும் மேற்பட்ட டெட்டனேட்டர்கள் இருப்பது தெரியவந்தது.இதையடுத்து வெடிகுண்டு செயல் இழக்க செய்யும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அதனை தக்க பாதுகாப்புடன் அப்புறப்படுத்தி எடுத்துச்சென்றனர். இதனால் ரயில் நிலையத்தில் பதற்றம் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை