உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பணம் பறிக்கும் துறையாக மாறிய அமலாக்கத்துறை: ராகுல் குற்றச்சாட்டு

பணம் பறிக்கும் துறையாக மாறிய அமலாக்கத்துறை: ராகுல் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஐதராபாத்: ‛‛அமலாக்கத்துறை பணம் பறிக்கும் துறையாக மாறி உள்ளது'' என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் முதல்வராக இருந்த போது எதிர்க்கட்சி தலைவர்களின் போன் ஒட்டு கேட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில், ஐதராபாத்தில் நடந்த கூட்டத்தில் இதனை மேற்கோள் காட்டி ராகுல் பேசியதாவது: தெலுங்கானாவில் முதல்வராக இருந்த சந்திரசேகர ராவ் செய்ததை, டில்லியில் பிரதமர் மோடி செய்து வருகிறார். அமலாக்கத்துறை, பணம் பறிக்கும் அமைப்பாக மாறி உள்ளது.காங்கிரஸ் வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்பது தெலுங்கானாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் தெரியும். 40 ஆண்டுகள் இல்லாத அளவு நாட்டில் வேலைவாய்ப்பின்மை உள்ளது. ஆனால், தெலுங்கானா அரசு 30 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கி உள்ளது. இன்னும் 50 ஆயிரம் பேருக்கு வேலை வழங்க உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

ராமகிருஷ்ணன்
ஏப் 08, 2024 07:17

காங்கிரஸ் ஆட்சியில் ஏவல் துறையாக இருந்ததையும் சொல்லுங்க


S. Balakrishnan
ஏப் 07, 2024 18:55

திருடி மறைத்து வைத்திருந்த பணத்தைத் தான் சட்டபூர்வமாக அமலாக்கத் துறை கைப்பற்றி நீதித்துறை உத்தரவுப்படி அரசாங்கத்திடம் ஒப்படைக்கிறது. ராகுல் மாதிரி அரசியல்வாதிகள் சட்ட ஓட்டைகளை பயன்படுத்தி யோக்கியர்கள் போல் நடமாடுகிறார்கள். இதில் கருத்து சுதந்திரம் என்று வாய்க்கு வந்ததை உளருகிறார்கள்.


J.V. Iyer
ஏப் 07, 2024 17:01

அமலாக்கத்துறை கொள்ளைப்பணத்தை பறித்தால் இவருக்கு என்ன ?


yts
ஏப் 07, 2024 14:30

அடி ரொம்ப பலம் போல


குமரி குருவி
ஏப் 07, 2024 14:08

அட தேச துரோகி.. லஞ்சம் மோசம் தான்.. திருத்தலாம் தேச துரோகி உன்னை திருத்த முடியவில்லை முடியாது


Balasubramanyan
ஏப் 07, 2024 13:35

ராகுல் சாய்ஸ் unemployment increases How he wants to scrP Agniveer It gives to youngsters who are interested in safeguard nation a chance to work and employment There are guarantees for these yyoungsters He born undefined golden spoon Not others He is not earning then how he has crores asset Has he forgotten the appointment orders given by PM to thousands of youngsters What your party did to eradicate unemployment and poverty


A1Suresh
ஏப் 07, 2024 13:02

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஆயிரம் கோடி சொத்துக்கள் முடக்கப்பெற்றது அதைத்தான் திரித்து பேசுகிறார்


GMM
ஏப் 07, 2024 12:58

ஊழல் பணம் சேர்க்க காங்கிரஸ் போன்ற கட்சிகள் இருக்கும் போது, அதனை பறிமுதல் செய்ய அமலாக்க துறை போன்ற அரசு அமைப்புகள் தேவை தேர்தல் நேரத்தில் இந்தியா கூட்டணி பறக்கும் படை ஆள் பார்த்து, பணத்தை பறிமுதல் செய்கிறது? நேர்மையாக ஆண்டு முழுவதும் செயல் பட்டால், காங்கிரஸ், திராவிட கட்சிகள் ஆரம்ப நிலை அடைவர் ?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை