உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் பதட்டம்: முன்னேறும் விவசாயிகள் பேரணி: கண்ணீர் புகை வீச்சு

டில்லியில் பதட்டம்: முன்னேறும் விவசாயிகள் பேரணி: கண்ணீர் புகை வீச்சு

புதுடில்லி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி , முற்றுகை போராட்டத்துக்காக ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டில்லி நோக்கி புறப்பட்டனர். 500 க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் மற்றும் லாரிகளில் வந்த வண்ணம் உள்ளனர். அரியானா- பஞ்சாப் எல்லையான ஷம்பு என்ற பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் விவசாயிகள் தடுப்புகளை தள்ளி முன்னேறி சென்றனர். இதனால் பதட்டம் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசினர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xzwa6tz9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0உத்தர பிரதேசம், ஹரியானா, பஞ்சாப்பில் உள்ள விவசாய சங்கங்கள் வேளாண் பொருட்களுக்கு எம்.எஸ்.பி., எனப்படும் குறைந்தபட்ச ஆதார விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டம், ஓய்வூதியம், நில அபகரிப்புக்கு உரிய நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தலைநகர் டில்லியை நோக்கி பேரணியாக அணிவகுத்து செல்ல இன்று அழைப்பு விடுத்திருந்தது.இந்நிலையில், மத்திய அரசை கண்டித்து, முற்றுகை போராட்டத்துக்காக மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டில்லி நோக்கி புறப்பட்டனர். இதனால் டில்லியில் உள்ள முக்கிய எல்லை பகுதிகளில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். நகரின் முக்கிய பாதைகள் மாற்றி விடப்பட்டதால் , வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. டில்லியில் வரும் மார்ச் 12ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் ஏதும் அசம்பாவிதத்தில் ஈடுபடாமல் இருக்க ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.Gallery

விவசாயிகளின் பிரதான கோரிக்கைகள் என்னென்ன

* விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்தல்* குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்குதல்* 2013 நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது, விவசாயிகளிடமிருந்து எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் பெறவும், கலெக்டர் விகிதத்தை விட நான்கு மடங்கு இழப்பீடு வழங்குதல்* 2021 லக்கிம்பூர் கெரி கொலைகளின் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்குதல்* உலக வர்த்தக அமைப்பிலிருந்தும் (WTO), பிற நாடுகளுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களில் இருந்தும் அரசு விலகுதல்* விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம்* மின்சாரத் திருத்த மசோதா 2020 ரத்து செய்தல்* மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்பின கீழ் ஆண்டுக்கு 200 (100 நாட்களுக்குப் பதிலாக) நாட்கள் வேலை வாய்ப்பு, தினசரி ஊதியம் ரூ.700 வழங்குதல்

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு வேண்டுகோள்

சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர்களின் சங்க தலைவர் ஆதிஷ் அகர்வாலா சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், 'இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் வகையிலும் விவசாயிகள் நடத்த இருக்கும் பேரணிக்கு எதிராக தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 70 )

தாமரை மலர்கிறது
பிப் 13, 2024 23:53

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றினால், அரிசி, கோதுமை, காய்கறிகள் விலைகள் ஐந்து மடங்கு உயரும். இதன் காரணமாக எண்ணெய், நெய், சீஸ், பால், பருப்பு என்று அனைத்தின் விலை யம் உயரும். ஹோட்டல் விலை தாறுமாறாக உயரும். கோடிக்கணக்கான மக்கள் எதையும் சாப்பிட முடியாமல் பட்டினியால் மடிவார்கள். அதனால் பொதுமக்களே விவசாயிகளை கட்டுப்படுத்த வேண்டும். நாடு திவாலாகி மக்கள் கஷ்டப்படவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் பாகிஸ்தான் சீனாவுடன் சேர்ந்து சதிவேலையில் ஈடுபட்டு, விவசாயிகளை தூண்டிவிடுகிறார்கள்.


Senthil kumar
பிப் 13, 2024 22:46

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்பின கீழ் (100 நாள் வேலைவாய்ப்பு) ஏற்கனவே விவசாயத்திற்கு ஆள் பற்றாக்குறை நிலவிவருகிறது இதில் 200 நாள் வேலைவாய்ப்பு என்றால் விவசாயமே செய்யமுடியாத நிலைதான் ஏற்படும்.


Ram
பிப் 13, 2024 22:19

துரத்துங்கள்


Priyan Vadanad
பிப் 13, 2024 20:25

இப்படி தெருவில் இறங்கி போராடித்தான் பாஜகவை திரும்பவும் ஆட்சியில் அமர்த்தினர் என்பதை மறக்கக்கூடாது. இவர்களது போராட்டம் பாஜகவுக்கு லாபமே தவிர வேறொன்றுமில்லை. ஒருவேளை பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர முன்னெடுக்கும் முயற்சிதான் இது என்கிற எண்ணமும் வருகிறது.


Rajagopal
பிப் 13, 2024 19:57

இவர்கள் விவசாயிகளே அல்ல. பண முதலைகள். அரசாங்கத்திடமிருந்து இலவசமாக மின்சாரம், டீசல், உரம் என்று வாங்கி, உண்மை விவசாயிகளை கடனாளிகளாக மாற்றி, வறுமையில் தள்ளி, விலைகளை இவர்களே நிர்ணயித்து, கொழுத்த லாபம் சம்பாதித்து, எல்லா பணத்தையும் எடுத்து, அரசியல்வாதிகளை விலைக்கு வாங்கி, போதைப்பொருள் வியாபாரத்தில் முதலீடு செய்து, வெளிநாடுகளில் பணத்தை கொண்டுபோய் குமித்து, தங்கள் ஆட்களுக்கு கனடா, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் குடியுரிமை வாங்கிக்கொடுத்து, அங்கே இடம் மாறி, அங்கேயிருந்துகொண்டு, இங்கே மேலும் நிலங்களை வாங்கி, இப்போது காலிஸ்தான் வேண்டும் என்று கிளம்பியிருக்கிறார்கள். இவர்களை தொட விடமுடியாதபடி மேலை நாடுகள் பாதுகாக்கின்றன. மோடி அரசை நிலைகுலைய செய்ய இவர்கள் இந்த மாதிரி திட்டம் போட்டு, நமது எதிர்கட்சிகளையெல்லாம் தங்களுக்கு ஆதரவாக மாற்றி, போராட்டம் என்று போலியாக செய்து, பேரம் பேச வந்திருக்கிறார்கள். நாட்டில் இருக்கும் மீதி விவசாயிகள் இவர்களைப்போல இத்தனை பணபலத்தோடு, இடதுசாரி பக்கபலத்தோடு செயல்படுவதில்லை. இவர்கள் தேசத்தை சீர்குலைக்கும் முதலைகள். இவர்களை களையெடுக்காமல் மோடி அரசு ஏன் தயங்குகிறது என்று தெரியவில்லை. இதை நடக்கவே விட்டிருக்கக்கூடாது. இதை யார் ஏற்பாடு செய்கிறார்கள், பணம் எங்கெல்லாம் போகிறது, எங்கிருந்து வருகிறது, இவர்களின் அடியாட்கள் யார் என்று உளவுத்துறை வைத்து கன்டுபிடித்து உள்ளேதள்ளி முட்டிகளை பெயர்தெத்தெடுத்திருக்க வேண்டும். 2019 ல் ஏற்கனவே இந்த மாதிரி ஒரு வருடத்துக்கு இவர்களால் எப்படி விலை உயர்ந்த டிராக்டர்கள், லாரிகள் கொண்டு வர முடிந்தது, யார் வசதியான ஏசி டென்டுகள், மசாஜ் வசதிகளுக்கு பணம் கொடுத்தது என்று விசாரணை தொடங்கியிருக்க வேண்டும். ஒன்றுமே செய்யாமல் பெப்பெப்பே என்று இருந்து விட்டார்கள். அதற்குப்பிறகும் இது மீண்டும் நடக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்று எந்த முயற்சியும் எடுத்த மாதிரி தெரியவில்லை.


sridhar
பிப் 13, 2024 18:40

Election time farmers. Politicians masquerading as farmers.


PREM KUMAR K R
பிப் 13, 2024 17:21

As AAP convenor Kejriwal and his Punjab CM did not find any best alternative for tackling Modi politically, they have taken the wrong route by asking help from rich farmers to restart/renew their protest/agitation, who have no other entertainment in their life, to come prepared for a stay of at least six months for their time passing as well making Delhi as a unrest place and also through which easily can disturb the general public and lok sabha election. They have given a job to Home Minister Amit Shah for showing how strong and strict he is in taking maximum and severe action against all, those who are forcibly trying to enter as farmers.


Svs Yaadum oore
பிப் 13, 2024 17:07

சோறு போடும் விவசாயிகள் என்று விடியல் திராவிடனுங்க புலம்பல் ....வடக்கன் விவசாயிகள்தான் சோறு போடும் விவசாயிகள் ....அப்ப பரந்தூர் விமான நிலைய நம்ம ஊர் விவசாயிகள் எல்லாம் விடியலுக்கு விவசாயிகளாக தெரியவில்லையா ....


Svs Yaadum oore
பிப் 13, 2024 17:04

இதுக்கு என்னமோ சோறு போடும் விவசாயிகள் என்று விடியல் திராவிடனுங்க கூப்பாடு ....என்னமோ இவனுங்கதான் விவசாயிகள் ரொம்ப அக்கறை ....வடக்கன் ஹிந்திக்காரன் தமிழன் வரிப்பணம் எல்லாம் வடக்கன் சாப்பிடறான் என்று ஒரு வாரம் முன்பு கூப்பாடு போட்டதெல்லாம் விடியலுக்கு மறந்து போய் விட்டது ....


Kasimani Baskaran
பிப் 13, 2024 17:04

உபிஸ் இங்கு ஓடிவந்து கருத்து சொல்வார்கள். ஆனால் மாநில அளவில் காவேரி பிரச்சினை என்றால் நவ துவாரங்களையும் மூடிக்கொள்வார்கள்... வெறும் 300 ஓவாய்க்காக பல நாக்குகள் ஒரே நேரத்தில் உபயோகிக்கும் வெட்கங்கெட்டதுகள்...


தமிழ்
பிப் 13, 2024 18:54

வெறும் ரெண்டு ரூபாய்க்காக நீயே நாக்கை தொங்கபோட்டுக்கொண்டு இருக்கவில்லையா அதேபோல்தான்.


அருண் குமார்
பிப் 13, 2024 19:28

உபிங்க பரந்தூர் விவசாயி பற்றி பேசுமாட்டானுங்க எதாவது பிஜேபி எதிர்த்துனா கருத்து சொல்ல வந்து விடுவானுங்க


Sathyasekaren Sathyanarayanana
பிப் 13, 2024 23:06

உண்மை பெயரில் கருத்து எழுத வக்கு இல்லாமல் தமிழ் என்று முகமூடி பெயரில் ஏன் எழுதுகிறாய்?


மேலும் செய்திகள்









புதிய வீடியோ