உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வேலைவாய்ப்பு பெருகி வருகிறது: பொருளாதார அறிக்கையில் நிதி அமைச்சர் தகவல்

வேலைவாய்ப்பு பெருகி வருகிறது: பொருளாதார அறிக்கையில் நிதி அமைச்சர் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று (ஜூலை 22) லோக்சபாவில் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=morrzsbb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 7வது முறையாக பார்லிமென்டில் மத்திய பட்ஜெட்டை நாளை (ஜூலை 23) தாக்கல் செய்ய உள்ளார். அதற்கு முன்னதாக இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியது. லோக்சபாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2023-24 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்தார்.அப்போது, கடந்த பட்ஜெட்டின் நிதி ஒதுக்கீடுகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்றும், அந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலவரம் குறித்தும் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்தார். 476 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கையில், 'நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது; தொழில் துவங்குவதற்கான நடைமுறைகள் எளிதாக்கப்படுகின்றன; நாட்டில் வேலைவாய்ப்புகள் பெருகி வருகின்றன' உள்ளிட்ட பல அம்சங்கள் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Barakat Ali
ஜூலை 22, 2024 20:40

நண்பர் ஒருவர் கோவையில் ஒரு மீடியம் சைஸ் நிறுவனத்தில் ஹெச் ஆர் மேனேஜர் ..... நேர்காணலுக்கு வரும் அனுபவமற்ற, அனுபவமுள்ள இன்ஜினியர்களுக்கு கூட பிறரிடம் நடந்து கொள்ளவேண்டிய முறை, பண்பு, ஆங்கில அறிவு, எளிதில் வேலை கற்று பொறுப்பாக வேலை செய்யும் தகவமைவு எதுவுமே சரிவர இல்லை என்றார் .... அதே நிறுவனத்தைப் போல பல நிறுவனங்களிலும் இதே நிலைதான் என்கிறார் .... வேலைவாய்ப்புக்கள் இருக்கத்தான் செய்கின்றன, இளைஞர்கள்தான் தகுதிகளை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்றும் கூறுகிறார் ....


Mario
ஜூலை 22, 2024 17:20

2 கோடி வேலை வாய்ப்பு, மறுபடியும் முதலிருந்தா


Tamil Inban
ஜூலை 22, 2024 17:15

ஏந்த நாட்டில், இப்போது வியட்நாமில் தான் வேலை வாய்ப்பு அதிகம் உள்ளது


Rengaraj
ஜூலை 22, 2024 16:28

இங்க எல்லாருக்கும் வேலை இருக்கு ஆனா மாசம் ஒவ்வொருவருக்கும் ஐம்பதாயிரம் தர்ற அளவுக்கு இல்லை ஒரு நாளைக்கு பத்து மணிநேரம் அல்லது பன்னிரண்டு மணிநேரம் கண்டிப்பாக வேலை பார்க்கணும். அதற்கு பட்டதாரிகள் மற்றும் இளைஞர்கள் தயாராக இல்லை. ? குறைந்த மணிநேர உழைப்பு ஆனால் மாசம் ஐம்பதாயிரம் அல்லது ஒரு லட்சம் சம்பளம் என்று எதிர்பார்த்தால் இங்கே வேலை இல்லை வேலை இல்லா திண்டாட்டம் தான் இருக்கு என்று சொல்லலாம். இன்று நாற்பது வயதுக்கு கீழ் தனியார் கம்பெனியில் பணிபுரியும் ஒருவரை எடுத்து கொள்ளுங்கள். அவர் கடந்த பத்து அல்லது பதினைந்து வருடங்களில் எத்தனை கம்பெனி மாறியிருக்கிறார் என்று பாருங்கள். அதிலிருந்தே தெரியும் தொடர்ச்சியாக ஒரு கம்பெனியில் ஒருவர் வேலைபார்ப்பதே அரிதாக இருக்கிறது. விசுவாசம் இல்லை. அர்ப்பணிப்புடன் பணிபுரிவதில்லை. எஜமானர்களுக்கும் நம்பிக்கை இல்லை. எனவே சம்பளம் அதிகம் கிடைப்பதில்லை.


sankaran
ஜூலை 22, 2024 16:28

கொரிஎர் டெலிவரி மற்றும் ஜமாடோ , ஸ்விக்கி சாப்பாட்டு டெலிவரி வேலை தான் கிடைக்கிறது.. நல்லா படிச்சவன் கூட அந்த வேலைக்குத்தான் போக வேண்டி உள்ளது.. போதா குறைக்கு AI வேற..


KRISHNAN R
ஜூலை 22, 2024 14:24

எந்த கட்சி ஆட்சி வந்தாலும்.. மிடில் கிளாஸ்.... க்கு..... ஹல்வா தான் போல


venugopal s
ஜூலை 22, 2024 13:32

பட்ஜெட் என்பதற்கு மற்றொரு பெயர் பொய் !


S. Narayanan
ஜூலை 22, 2024 13:24

ஷேர் மார்க்கெட் உச்ச கட்டத்தை அடையும் போது நிச்சயம் வேலை வாய்ப்புகள் பெருகும் என்பது நம்பிக்கை


Narayanan Muthu
ஜூலை 22, 2024 13:24

அல்வா கிண்டின கையேடு அம்மணி வடை சுடுது. ஆனா ரசிக்கத்தான் முடியும். ருசிக்கமுடியாது.


S BASKAR
ஜூலை 22, 2024 13:10

ஆமா ஆமா தமிழ் நாட்டுல மட்டுமல்ல பல மாநிலத்திலும் புதுசா மாவட்டம் வருது. அதுனால mla & mp எண்ணிக்கை அதிகரிக்கும். அதுனால வேலை வாய்ப்பு அதிகரிச்சுட்டு


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி