உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜார்கண்ட் சட்டசபை இடைத்தேர்தலில் ஹேமந்த் சோரன் மனைவி போட்டி

ஜார்கண்ட் சட்டசபை இடைத்தேர்தலில் ஹேமந்த் சோரன் மனைவி போட்டி

ராஞ்சி: ஜார்கண்டில் ஒரு தொகுதிக்கு நடக்க உள்ள சட்டசபை இடைத்தேர்தலில் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா போட்டியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஜார்கண்டில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் மீது நில மோசடி மற்றும் சுரங்க மோசடி புகார்கள் விவகாரத்தில் கோடிக்கணக்கான ரூபாய் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறையினர் கடந்த ஜன., 31ல் கைது செய்தனர். முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். சாம்பை சோரன் முதல்வராக பதவியேற்றார்.தற்போது, ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா சிறையில் ஹேமந்த், அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் லோக்சபாவுக்கு ஏழு கட்டங்களாக நடைபெற்று வரும் தேர்தலில் ஜந்தாம் கட்டமாக வரும் மே 20-ம் தேதி ஜார்க்கண்ட் மாநில கேண்டி சட்டசபை தொகுதியுடன் லோக்சபா தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது.இதில் கேண்டி சட்டசபை தொகுதியில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி சார்பில் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா போட்டியிட உள்ளதாக இன்று கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

R Kay
ஏப் 26, 2024 03:34

எங்கும் குடும்பம் எதிலும் குடும்பம் திரைத்துறையில், அரசியலில், இவை ரொம்பவே அதிகம் கட்சிகளும், அவற்றின் சொத்துக்களும் குடும்ப சொத்துக்களாகிப்போயின இன்று ஜனநாயகம், மக்கள் பிரதிநிதிகள் என்ற சொற்களெல்லாம் ஏட்டளவில்தான்


kulandai kannan
ஏப் 25, 2024 21:28

வாரிசு அரசியலை ஒழித்துக் கட்டுவோம்.


Godfather_Senior
ஏப் 25, 2024 21:04

குடும்ப சொத்து, குடும்ப கட்சி பெண்டாட்டி பிள்ளைங்க மட்டும்தான் ஆட்சிக்கு வரமுடியும், எவனும் வெளி மனுஷன் கண்டிப்பா குடும்ப கட்சிகளில் நுழைய முடியாது ஜனங்கள் இவர்களை ஓரம் காட்டினால்தான் தேசம் உருப்படும் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி, திரிணாமுல், ஒய்யெஸ்ஸார், என்சி, என்சிபி போன்ற ஏராளமான காட்சிகள் ஓரங்கட்டப்பட்டால்தான் நாட்டிற்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும் ஓசிக்கு ஆசைப்படுபவர்கள் இருக்கும்வரை தலைவலிதான் மிஞ்சும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை