மேலும் செய்திகள்
2வது டெஸ்ட்: 201 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்திய அணி
2 hour(s) ago | 3
உத்தராகண்டில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 5 பேர் பலி
4 hour(s) ago
பிரபல ஹிந்தி நடிகர் தர்மேந்திரா காலமானார்
4 hour(s) ago | 11
புதுடில்லி: டில்லியில் கடந்த நான்கு ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவில் நவம்பர் மாதத்தில் மலேரியா பாதிப்பு அதிகபட்சமாக பதிவாகியது, அதேவேளையில் டெங்கு பாதிப்பு குறைந்துள்ளது என்று டில்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது.இது குறித்து டில்லி மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை:டில்லியில் நவம்பர் மாதத்தில் இதுவரை 67 பேருக்கு மலேரியா தொற்று பதிவாகியுள்ளது, இது கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச எண்ணிக்கை ஆகும், கடந்த 4 ஆண்டுகளில் முறையே 57 பேருக்கு (2024) 26 பேருக்கு (2023) 36 பேருக்கு (2022) 7 பேருக்கு (2021) தொற்று பதிவாகி இருந்தது. டில்லி முழுவதும் இந்தாண்டில் 690 பேருக்கு மலேரியா தொற்று பதிவாகி , கடந்த ஆண்டை(744 பேருக்கு) காட்டிலும் சற்று குறைந்தாலும், கடந்த 2023 ஆம் ஆண்டு(369 பேருக்கு) பதிவானதை விட அதிகபட்சமாகும். அதே சமயம், டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது கணிசமாகக் குறைந்துள்ளன.இவ்வாறு மாநகராட்சி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2 hour(s) ago | 3
4 hour(s) ago
4 hour(s) ago | 11