உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தாய், இரட்டை குழந்தைகள் மரணம் டாக்டர்களின் அலட்சியம் காரணமா?

தாய், இரட்டை குழந்தைகள் மரணம் டாக்டர்களின் அலட்சியம் காரணமா?

கதக்: கொப்பால் குகனுாரின்,விருபாபுரா கிராமத்தில் வசித்தவர் நந்தினி, 24. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு, பிப்ரவரி 2ல் பிரசவ வலி ஏற்பட்டது. கதக், கஜேந்திரகடாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.ஆப்பரேஷன் செய்து இரட்டை குழந்தைகளை, டாக்டர்கள் வெளியே எடுத்தனர். சிறிது நேரத்தில்இரண்டு குழந்தைகளும் இறந்தன. இதனால் நந்தினியும், குடும்பத்தினரும் வருத்தம் அடைந்தனர்.பிரசவத்துக்கு பின், நந்தினிக்கு ரத்தப்போக்கு அதிகரித்ததுடன், குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டது. கூடுதல் சிகிச்சைக்காக பாகல்கோட் பாதாமியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல், நந்தினி நேற்று உயிரிழந்தார்.தாயும், இரட்டை குழந்தைகளும் உயிரிழக்க, கஜேந்திரகடா தனியார் மருத்துவமனை டாக்டர்களின் அலட்சியமே காரணம் என, குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி மருத்துவமனை முன் போராட்டம் நடத்தினர். தகவலறிந்து அங்கு வந்த கஜேந்திர கடா போலீசார், பெண்ணின் குடும்பத்தினரை சமாதானம் செய்து அனுப்பினர். தாய், சேய்களின் இறப்புக்கு என்ன காரணம் என, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்