மேலும் செய்திகள்
ஜம்மு காஷ்மீர் தேர்தல்; 59% ஓட்டுப்பதிவு
18-Sep-2024
புதுடில்லி : மஹாராஷ்டிரா சட்டசபைக்கு நவ., 20ல் ஒரே கட்டமாகவும், ஜார்க்கண்ட் சட்டசபைக்கு நவ., 13 மற்றும் 20ல் இரண்டு கட்டங் களாகவும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டுகள் நவ., 23ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.மொத்தம், 288 உறுப்பினர்கள் அடங்கிய மஹாராஷ்டிரா சட்டசபையின் பதவி காலம், நவ., 26ல் முடிவுக்கு வருகிறது. 81 உறுப்பினர்கள் உடைய ஜார்க்கண்ட் சட்டசபையின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஜன., 5ம் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து இரண்டு மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதிகளை தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் நேற்று அறிவித்தார்.மஹாராஷ்டிரா சட்டசபைக்கு நவ., 20ல் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கிறது. ஜார்க்கண்ட் சட்டசபை தொகுதிகளுக்கு நவ., 13 மற்றும் 20ல் இரண்டு கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடக்கிறது. பிரியங்கா போட்டி
இது தவிர, காங்., - எம்.பி., ராகுல் ராஜினாமா செய்த கேரளாவின் வயநாடு லோக்சபா தொகுதிக்கும், பல்வேறு மாநிலங்களில் உள்ள 48 சட்டசபை தொகுதிகளுக்கும் நவ., 13ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வயநாடு லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா போட்டியிடுகிறார்.உத்தரகண்டின் கேதார்நாத் சட்டசபை தொகுதி மற்றும் மஹாராஷ்டிராவின் நான்டெட் லோக்சபா தொகுதிக்கு நவ., 20ல் இடைத்தேர்தல் நடக்கிறது. தேர்தல் மனுக்கள் நிலுவையில் இருப்பதால், மேற்கு வங்கத்தின் பசிர்ஹட், உத்தர பிரதேசத்தின் மில்கிபுர் லோக்சபா தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. மஹாராஷ்டிராவில், 9.63 கோடி வாக்காளர்களும், ஜார்க்கண்டில் 2.6 கோடி வாக்காளர்களும் ஓட்டளிக்க உள்ளனர்..தேர்தல்களில் பதிவான ஓட்டுகள் நவ., 23ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், மஹாராஷ்டிராவின் மும்பை, புனே உள்ளிட்ட நகரங்களில் ஓட்டுப்பதிவு மந்தமாகவே இருந்தது. இந்த போக்கு கவலை அளிக்கிறது. நகர்ப்புறங்களில் உள்ள மக்கள் அதிக எண்ணிக்கையில் ஓட்டளிக்க வேண்டும். ஹைதராபாதின் ஜூப்ளி ஹில்ஸ், பெங்களூரு தெற்கு, காந்திநகர், மும்பையின் கோலாபா, புனே, தானே உள்ளிட்ட நகரங்களில் மிக மோசமான எண்ணிக்கையில் ஓட்டுகள் பதிவாகி உள்ளன. இந்த நிலைமையை மாற்றுவதற்காகவே, இந்த முறை வார மத்தியில் புதன் கிழமை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தேர்தல் தேதியை வார கடைசி விடுமுறை நாளாக கருதி வெளியூர் செல்லாமல் மக்கள் ஆர்வமுடன் ஓட்டளிப்பர் என நம்புகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
18-Sep-2024