உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீட் தேர்வு வினாத்தாள் கசிவு திட்டமிட்ட சதி: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு திட்டமிட்ட சதி: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கக் கூடாது என்பதற்காக அரசே திட்டமிட்டு நீட் தேர்வு வினாத்தாள் கசிய செய்ததாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் லோக்சபாவில் தெரிவித்தார். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் சமாஜ்வாதி கட்சி தலைவரும், எம்.பி.,யுமான அகிலேஷ் யாதவ் லோக்சபாவில் மேலும் பேசியதாவது: தேர்வு வினாத்தாள்கள் கசிவது ஏன் தெரியுமா? நீட் வினாத்தாள் கசிவில் சம்பந்தப்பட்டவர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கக் கூடாது என்பதற்காக முன்னதாக அரசே திட்டமிட்டு இதை செய்கிறது என்பதே உண்மை.

ஓட்டுப்பதிவு இயந்திரத்தை நம்ப மாட்டோம்

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் மீது முன்பும் நம்பிக்கையில்லை, இப்போதும் நம்பிக்கையில்லை. சமாஜ்வாதி கட்சி உத்தர பிரதேசத்தின் 80 லோக்சபா தொகுதிகளிலும் வென்றாலும் கூட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை நம்ப மாட்டோம். ஓட்டுப்பதிவு இயந்திரம் பற்றிய பிரச்னைகள் இன்னும் முடிந்துவிடவில்லை. அயோத்தியை உள்ளடக்கிய தொகுதியில் பெற்ற வெற்றியானது, இந்தியாவின் முதிர்ச்சியடைந்த வாக்காளர்களின் வெற்றி. நாங்கள் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவாக இருக்கிறோம். அக்னிவீர் திட்டத்தை ஒருபோதும் ஏற்க முடியாது. இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், அக்னிவீர் திட்டம் ரத்து செய்யப்படும். பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை சட்டப்பூர்வ உத்தரவாதம் அமல்படுத்தப்படவில்லை. தோட்டக்கலை பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

R.Varadarajan
ஜூலை 03, 2024 18:03

நீட்டை எதிர்ப்பது தனியார் மருத்துவக்கல்லூரிகளை நடத்தும் அரசியல்வதகளை ஆதரிக்கும் திராவிடக்கட்சிகள்


Maheesh
ஜூலை 02, 2024 19:15

30,0000 கோடி கையில் இருப்பவர்கள் கேள்வித்தாளை அரியானாவில் லீக் செய்யலாம் திரிபுராவில் லீக் செய்யலாம்.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 02, 2024 17:18

ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் சிக்குகிறார்களே ????


sethu
ஜூலை 02, 2024 14:10

தமிழ்நாடு மக்கள் திருந்தினால் இந்த உலகமே திருந்தும்


கனோஜ் ஆங்ரே
ஜூலை 02, 2024 16:40

வாய்ப்பில்ல ராசா...?


ஆரூர் ரங்
ஜூலை 02, 2024 14:07

கருணை மதிப்பெண் கைவிடப்பட்ட மாணவர்கள் மீண்டும் நீட் தேர்வெழுதி மார்க்கும் வெளிவந்துள்ளது. எல்லோரும் கிட்டத்தட்ட அதே ரேங்க் தான் எடுத்துள்ளனர். ஆக முறைகேடு புகார் பொய் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.


கனோஜ் ஆங்ரே
ஜூலை 02, 2024 16:42

இந்த கம்பி கட்ற கதையெல்லாம் இங்கே விடாதேங்க... அப்ப, சிபிஐ.. குஜராத்திலும், பிகாரிலும் பத்து பேரை கைவிலங்கு + கயிற்றை கட்டி கைது செய்து...


Swaminathan L
ஜூலை 02, 2024 13:19

நீட் வினாத்தாள் கசிவு திட்டமிட்ட சதியே. 1563 பேருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கியதும் சதியே. ஆனால், இந்த சதி சில நபர்களால் பெரும் கையூட்டுக்காகச் செய்யப்பட்டிருக்கிறது. காலங்காலமாக பல விஷயங்களில் கையூட்டு, பதவி, அதிகாரம், புகழுக்காக சதிகள் நடந்து கொண்டு தானிருக்கின்றன. நீட் தேர்வு நிர்வாக முறையில் குளறுபடிகள், சதிகள் நடக்காத படி ஓட்டைகளை அடைத்தால் போதும். மற்றபடி, மாநில பாடத்திட்டங்களை மேம்படுத்தி, மாணவர்களின் சிந்திக்கும், ஆராயும் திறனை வளர்த்து, நீட் தேர்வுப் பயிற்சிகளை மாநில அரசுப் பள்ளிகள் சரிவரத் தந்தால் அரசுப் பள்ளி மாணவர்களும் பெருமளவில் மருத்துவப் படிப்பு படிக்கும் வாய்ப்பு பெருகும். மாநில அரசு ஊழியர்கள் சேர்க்கைக்காக நுழைவுத் தேர்வு இருக்கிறது. அதில் கையூட்டு பெற்று சிலர் சதிகள் செய்தால் அதற்காக நுழைவுத் தேர்வு கூடாது என்று முடிவு செய்ய முடியுமா?


Swaminathan L
ஜூலை 02, 2024 13:13

அயோத்தியை உள்ளடக்கிய ஃபைஸாபாத் தொகுதியில் ஸமஜ்வாதி கட்சி வென்றது ஓட்டு இயந்திரக் கோளாறு அல்லது தில்லுமுல்லு காரணமாகவா? பாஜக அந்தத் தொகுதியில் நாம் தோற்கிறோம் என்று தேர்தல் ஆணையத்திடம் சொல்லி ஓட்டு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்து ஸமஜ்வாதி கட்சியை ஜெயிக்க விட்டதா? 80 தொகுதிகளில் ஜெயித்தாலும் ஓட்டு இயந்திரத்தை நம்ப மாட்டோம் என்றால் ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைத்த மக்களையுமல்லவா நம்ப மாட்டோம் என்கிறார்?


S.Bala
ஜூலை 02, 2024 12:41

வெளிநாடுகளிலிருந்து குறிப்பாக சோரசிடமிருந்து வாங்குற காசுக்கு நல்லா கூவுறாப்போல . இந்தியாவிற்கு எதிரி வெளிநாடுகளில் இல்லை . குடும்பம், ஜாதி பதவி வெறி பிடித்தவர்கள் நம்மை அழிக்க காத்து கொண்டிருக்கிறார்கள்.


Murugesan
ஜூலை 02, 2024 12:31

திருட்டு அயோக்கிய திமுக கூட்டாளிகளான நீங்க தான் பணத்தை கொடுத்து செய்ய சொன்னீர்கள்


மேலும் செய்திகள்









புதிய வீடியோ