உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / " பேரன் மீது நடவடிக்கை ஆட்சேபனை இல்லை " - தேவகவுடா

" பேரன் மீது நடவடிக்கை ஆட்சேபனை இல்லை " - தேவகவுடா

பெங்களூரு: ‛‛ பிரஜ்வல் ரேவண்ணா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவர் மீது நடவடிக்கை எடுப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை'' என, அவரது தாத்தாவும், மஜத தலைவருமான தேவகவுடா கூறியுள்ளார்.மஜத தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணா (33) மீதான ஆபாச வீடியோ வழக்கை மாநில சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் தேவகவுடா எந்த கருத்தும் கூறாமல் மவுனமாக இருந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kju7gytv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், தற்போது முதல் முறையாக இந்த விவகாரத்தில் மவுனம் கலைத்த தேவகவுடா நிருபர்களிடம் கூறியதாவது: பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதால், அது குறித்து கருத்துக் கூற விரும்பவில்லை. அவர் வெளிநாடு சென்றுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக கட்சி சார்பாகவும், குடும்பம் சார்பாகவும் குமாரசாமி பேசியுள்ளார். சட்டத்தின்படி நடவடிக்கை எடுப்பது மாநில அரசின் கடமை. பாலியல் துன்புறுத்தல் வழக்கில் பலருக்கு தொடர்பு உள்ளது. அவர்களின் பெயரை கூற விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டும் என குமாரசாமி கூறியுள்ளார். குற்றவாளி எனும் போது பிரஜ்வல் மீது நடவடிக்கை எடுப்பதில் ஆட்சேபனை இல்லை. ஆனால், ரேவண்ணா மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும், அவர் மீதான வழக்கு எப்படி பதியப்பட்டது என்பது குறித்தும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Lion Drsekar
மே 18, 2024 16:44

நாம் பள்ளியில் படிக்கும் காலங்களில் கிருஷ்ணதேவராயர் காலங்களில் அங்கம் வகித்த எட்டு அமைச்சர்களின் பெயரை நாம் மனப்பாடம் செய்து இருந்தோம் காரணம் பொது அறிவு யாராலே மாமான்னர்கள் மற்றும் குறுநில மன்னர்களின் குடும்ப பெயர்களை நினைவில் கொண்டு தேர்வு எழுதினால்தான் அரசு வேலை கிடைக்கும் வந்தே மாதரம்


Ravichandran S
மே 18, 2024 15:25

யார் குற்றம் செய்தாலும் சட்டப்படி தண்டனை பெற வேண்டும் இதில் முன்னாள் பிரதமர் ஒப்புக் கொண்டுவிட்டார் அப்புறம் என்ன


ஆரூர் ரங்
மே 18, 2024 13:32

அந்தக் காலத்தில் டிஜிட்டல் கருவிகள் இருந்திருந்தால் கட்டூஸ் வாரிசுகள் இதைவிடக் கேவலமா மாட்டிகிட்டிருப்பாங்க. ஒருத்தர் மட்டுமே மிஸ்ஸால உள்ளே போனாரு.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை