உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்த மூன்று பிரிவினரே எங்கள் கடவுள்: அகிலேஷ் யாதவ்

இந்த மூன்று பிரிவினரே எங்கள் கடவுள்: அகிலேஷ் யாதவ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: பிற்படுத்தப்பட்டோர், தலித்கள், சிறுபான்மையினர் ஆகிய 3 பிரிவினர் தான் எங்கள் கடவுள். வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை இந்த 3 பிரிவினர் தோற்கடிப்பர் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.இது பற்றி மேலும் அகிலேஷ் யாதவ் கூறியதாவது: இந்த அரசு, சிறுபான்மையினருக்கு எதிரானது. பிற்படுத்தப்பட்டோர், தலித்கள், சிறுபான்மையினர் ஆகிய 3 பிரிவினர் தான் எங்கள் கடவுள். வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை இந்த 3 பிரிவினர் தோற்கடிப்பர். உத்தர பிரதேசத்தில் இருந்து பா.ஜ.,வை அகற்றுவது என்பது, நாட்டிலிருந்தே பா.ஜ.,வை அகற்றுவதற்கு சமம். நாட்டு மக்கள் பா.ஜ.,வை அகற்ற விரும்புகிறார்கள். வளர்ந்த இந்தியா என்று முழங்கி, கிராமங்கள் தோறும் வாகனங்களில் பிரசாரம் செய்வதன் மூலம் வளர்ந்த இந்தியா என்ற கனவை நிறைவேற்ற முடியாது.2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என பா.ஜ., கூறியது. ஆனால் அது நடக்கவில்லை. ஆனால், நாட்டின் வேலையற்ற மக்களுக்கு மரியாதைக்குரிய வேலை கிடைக்கும் என எங்கள் சமாஜ்வாதி கட்சி உறுதியளிக்கிறது. பில்கிஸ் பானு தீர்ப்பால் நீதித்துறை மீது நம்பிக்கை பிறந்துள்ளது. நாங்கள் பா.ஜ.,வை நம்பவில்லை; ஆனால் நீதிமன்றத்தை நம்புகிறோம். பா.ஜ., அரசு பொய்யாக குற்றம் சாட்டிய அனைத்து மக்களுக்கும் நீதி கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Ramesh Sargam
ஜன 10, 2024 01:12

பிற்படுத்தப்பட்டோர், தலித்கள், சிறுபான்மையினர் ஆகிய 3 பிரிவினர் தான் எங்கள் கடவுள். அவர்கள் வாக்குகள் பெற்று, ஆட்சி அமைந்தவுடன், கோவிலுக்கு வெளியில் விடப்படும் 'செருப்பாக' கூட அவர்கள் மதிக்கப்படமாட்டார்கள். இதுதான் நமது அரசியல்வாதிகளின் உண்மையான முகம்.


Jai
ஜன 09, 2024 22:27

கிளம்பிட்டாரு, இன்னொரு வாரிசு


sankaranarayanan
ஜன 09, 2024 20:38

இது எல்லா அரசியல்வாதிகளும் சொல்லக்கூடிய வார்த்தைகள்தானய்யா அப்போ பெருவாரியான இந்துக்கள் யாருமே இனிமேல் உனக்கு வாக்கு அளிக்கமாட்டார்கள்


vbs manian
ஜன 09, 2024 20:06

நாட்டின் பிரசித்தி பெட் கொள் ளையர்கள் தாதா க்கள் இவர் கட்சி உறுப்பினர்கள். மாபியாக்கள் ஊட்டி வளர்க்கும் கட்சி. பிஹாரோடு போட்டி போட்ட வு பி மாநிலம் இப்போது அடியாட்கள் பிடியினின்று விடு பட்டு முன்னேறி வருகிறது. இவர் கட்சி பதினெட்டாம் நூற்றாண்டு


Mohan
ஜன 09, 2024 18:28

குண்டு வெடிக்காத, துப்பாக்கி சத்தம் கேட்காத, மத வெறிக்குரல் ஓங்காத உத்தரப் பிரதேசமாக இப்போது மாறியுள்ளது. அதை பழையபடி மாற்ற நினைக்கும் தீய சக்திகளை மக்கள் 2024 தேர்தலில் தூக்கி எறிவர்.


Arul Narayanan
ஜன 09, 2024 18:21

அந்த கடவுள்களின் வரம் கிடைக்காது.


A1Suresh
ஜன 09, 2024 17:47

பெரும்பான்மையினர் எக்கேடு கேட்டாலும் கவலையில்லை . நாடு நாசமாக போனாலும் கவலையில்லை . காசே தான் கடவுளடா


A1Suresh
ஜன 09, 2024 17:46

காசேதான் கடவுளடா . அதை தரும் பதவி-அதிகாரமே கடவுளடா .அதை வழங்கும் ஓட்டே கடவுளடா . அதே செலுத்தும் "அமைதி மார்கத்தினரே " கடவுளடா .


Seshan Thirumaliruncholai
ஜன 09, 2024 17:28

67 ஆண்டுகளாய் ஆண்ட கட்சி யாதவ் கூறும் மூன்று பிரிவினருக்கு என்ன செய்தார் என்பதனை முதலில் கொண்டுசெல்லுங்கள். அந்த கட்சி I.N.D.I.A கூட்டணியில் உள்ளவரை உங்கள் கேள்விக்கு பதில் கூற அவசியம் இல்லை. மேலும் அந்த கட்சி U.P பில் புல் பூண்டு இல்லாமல் வேரோடு மக்கிவிட்டது.


Mohan das GANDHI
ஜன 09, 2024 17:19

AKLESH YADHAV A GREAT CORRUPTED MAFIA IN UP. HE LOOTED MORE THAN MANY MILLIONS CRORES PEOPLE TAX PAYERS UP POOR PEOPLE MONEY, NOW THIS CROCODILE TIERS PEOPLE OF UTTER PRADESH. CONGRES AND BSP THE MAFIA LADY ALL ARE SPOILED THE UP ECONOMY RULED SINCE MANY YEARS AND LOOTED BUT TODAY ALL DALITHS AND MUSLIMS AND CHRISTIANS ALSO LARGE POPULATIONS OF HINDUS ARE FULL SUPPORT TO ONLY THE GREAT SINCERE AND SIMPLE HUMAN STRAIGHT FORWARD BJP MR.YOGI ADHITHYANATH CHIEF MINISTER OF UTTER PRADESH STATE. HE IS VERY FRIENDLY CLOSE FAMILY TO ALL COMMUNITIES OF UTTER PRADESH PEOPLE IS REALITY. BJP WILL RULED FOREVER IN UP IS FACT.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை