உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எத்தனால் கலந்த பெட்ரோலால் எந்த பிரச்னையும் இல்லை; ஒரு நிகழ்வு காட்டுங்க பார்ப்போம்: சவால் விட்டார் நிதின் கட்கரி!

எத்தனால் கலந்த பெட்ரோலால் எந்த பிரச்னையும் இல்லை; ஒரு நிகழ்வு காட்டுங்க பார்ப்போம்: சவால் விட்டார் நிதின் கட்கரி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''எத்தனால் கலந்த பெட்ரோலால் வாகனத்துக்கு பாதிப்பு என்று எந்த ஒரு புகாரும் இதுவரை வரவில்லை. ஏதேனும் ஒரு நிகழ்வு காட்டுங்க பார்ப்போம்,'' என்று மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி சவால் விட்டுச்சொன்னார்.இது தொடர்பாக, தனியார் செய்தி சேனல் நடத்திய மாநாட்டில் நிதின் கட்கரி பேசியதாவது: பெட்ரோலில் எத்தனால் கலக்கும், அரசின் திட்டம் குறித்து தவறான தகவல்கள் பரப்புகின்றனர். 20% எத்தனால் கலந்த பெட்ரோலால் வாகனங்களுக்கு பிரச்னை ஏற்படுகிறது என்று இதுவரை எந்த புகாரும் வரவில்லை. ஏதேனும் ஒரு நிகழ்வு காட்டுங்க பார்ப்போம்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jobdls1m&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சாதாரணமாக வாகனங்களுக்கு ஏற்படும் பிரச்னையை கூட, இதுதான் காரணம் என விமர்சனம் செய்யப்படுகிறது.பெட்ரோலில் எத்தனால் கலப்பதால், நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு குறைகிறது. பசுமை இல்ல வாயு உமிழ்வைக் கட்டுப்படுத்துவதன் மூலம், இந்த திட்டம் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் காலநிலை இலக்குகளை ஆதரிக்கிறது. இந்த திட்டத்தால் பொருளாதாரம் மேம்படுகிறது.

வருமான வாய்ப்பு

எத்தனால் உற்பத்தி விவசாயிகளுக்கும் புதிய வருமான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. சோளம் குவிண்டாலுக்கு ரூ.1,200க்கு விற்கப்பட்டது. இப்போது அது எத்தனால் தயாரிக்கப் பயன்படுகிறது. தற்போது, ஒரு குவிண்டால் ரூ.2,600 ஆக அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு கிராமப்புற விவசாய வருமானத்திற்கு நேரடியாக பயனளிக்கிறது. இவ்வாறு நிதின்கட்கரி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

தாமரை மலர்கிறது
ஆக 08, 2025 20:17

விவசாயிகளுக்கு ஆதரவு கொடுப்பதற்காக நாற்பது சதவீத எத்தனால் கலந்தால் கூட நாட்டிற்கு நல்லது தான்.சமூக வலைதளங்களில் வெறும் வதந்திகளை பரப்பி வருகிறார்கள். சமூகவலைதளங்களுக்கு லைசென்ஸ் கொண்டுவருவது நல்லது. அரசிடம் அனுமதி பெற்றுத்தான் எந்த செய்தியும் வெளியிட வேண்டும். ஆளாளுக்கு ஒரு போனை வைத்துக்கொண்டு மத்திய அரசுக்கு எதிராக தவறான செய்தி வெளியிட்டால், ரெண்டு வருடம் கடுங்காவல் சிறை தரப்படும்.


என்றும் இந்தியன்
ஆக 08, 2025 17:53

எத்தனால் கலந்த பெட்ரோலினால் ஒரு பிரச்சினையும் இல்லை 1 லிட்டருக்கு 40 கிமீ கொடுத்தது இப்போது 30 கிமீ தான் கொடுக்கின்றது இரு சக்கர வாகனங்களில் 10 கிமீ கொடுத்தது இப்போது 6 கிமீ தான் கொடுக்கின்றது 4 சக்கர வாகனங்களில்.இதைத்தவிர வேறு பிரச்சினையில்லை.


என்னத்த சொல்ல
ஆக 08, 2025 15:55

இத கலப்பதால் இறக்குமதி குறைக்கப்படுவது சரி.. ஆணா, பெட்ரோல் விலையில் ஒரு 10 ரூ. கூட குறைக்கிலேயே


Gokul Krishnan
ஆக 08, 2025 15:17

இந்திய மக்களுக்காக தற்போதைய மத்திய அரசு ஏராளமான நலன்களை செய்கிறது பிசிசிஐ இக்கு இந்திய தகவல் அறியும் சட்டத்தில் இருந்து விலக்கு டில்லி அரசில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் களுக்கு ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் பெரும்பாலான மொபைல் போன் மாத சந்தாவை 23 மற்றும் 28 நாட்கள் ஆக்கி ஜியோ நிறுவனத்துக்கு சலுகை பிஸ்னல் இக்கு இது வரை 4ஜி அலை கற்றை தராமல் இழுத்து அடிப்பு இப்படி அடுக்கி கொண்டே போகலாம்


ஆரூர் ரங்
ஆக 08, 2025 19:26

BCCI துவக்கத்திலிருந்தே தனியார் அமைப்புதான். அவர்கள் RTI இன் கீழ் எப்படி வருவார்கள்?


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஆக 08, 2025 14:18

விவசாயிகள் விவசாயம் விவசாயத்திற்கு நல்லதுன்னு யாராவது சொன்னால் போதும் கொஞ்ச பேருக்கு இஞ்சி தின்ன குரங்காட்டம் ஆயிட்டாங்க. என்னத்தை சொல்ல கடந்த ஏழு எட்டு வருசமா இந்த எத்தனால் கலந்த பெட்ரோலை தான் ஜனாதிபதி முதல் பாமர ஜனங்க வரை உபயோகிச்சிட்டு வர்றாங்க.


குமெரேஷ்
ஆக 08, 2025 14:17

அமெரிக்காவில் மூணு வித பெட்ரோல் விக்கிறாங்க. ஹை ஆக்டேன் பெட்ரோல் என்பது விலை உயர்ந்த கார்களுக்குப் போடுவது. விலை அதிகம். அடுத்து சாதாரண பெட்ரோல் எல்லா கார்களுக்கும் போடுவது. கொஞ்சம் விலை குறைச்சல். அடுத்தது 10 பர்சண்ட் எத்தனால் கலந்த பெட்ரோல், அதுக்குன்னே வடிவமைச்ச கார்கள். இங்கு அது மாதிரி கிடையாது. 20 பர்சண்ட் எத்தனால் கலக்கி எல்லா கார்களுக்கும் ஊத்திடறாங்க.


அப்பாவி
ஆக 08, 2025 14:12

அங்கங்கே ரோடுல நிக்கிற காருங்க தானா பத்திக்கிட்டு எரியுதே ஏன்னு கண்டுபிடிச்சீங்களா?


vivek
ஆக 08, 2025 15:09

உன்னை மாதிரி டாஸ்மாக் கேசுங்க கொளுத்தி போட்டு இருக்கும் கோவாலு


vivek
ஆக 08, 2025 16:55

அனைவரும் டாஸ்மாக் எனும் சத்து நிறைந்த சோமபானம் குடித்து நலமுடன் வாழுங்கள்


sutharsan
ஆக 08, 2025 13:23

அப்புடியே காமிச்சுட்டா ராஜினாமா பண்ணிட்டு போயிருவாரு ....


vivek
ஆக 08, 2025 13:58

சரி, அப்படி இல்லைனா நீ நேரா டாஸ்மாக் போயிடு....ஓகேவா


Jack
ஆக 08, 2025 13:15

அமெரிக்க பம்புகளில் எதனால் கலந்த கசோலின் என்று போர்டு வைக்கப்பட்டிருக்கும் விவசாய பம்புகள் டிராக்டர்களில் இன்னும் அதிக அளவில் எதனால் கலக்கலாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை