உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தென் இந்தியர்கள் ஆப்ரிக்கர்கள்; சாம் பிட்ரோடா மீண்டும் சர்ச்சை பேச்சு

தென் இந்தியர்கள் ஆப்ரிக்கர்கள்; சாம் பிட்ரோடா மீண்டும் சர்ச்சை பேச்சு

புதுடில்லி : பரம்பரை சொத்து வரி குறித்து தெரிவித்த கருத்தினால் ஏற்பட்ட சர்ச்சையை காங்கிரஸ் கட்சி சமாளிப்பதற்குள் அக்கட்சியின் அயலக அணி பொறுப்பாளர் சாம் பிட்ரோடா, தென் இந்தியர்கள் ஆப்ரிக்கர்கள் போலும், கிழக்கு இந்தியர்கள் சீனர்களை போலும், மேற்கு இந்தியர்கள் அரேபியர்கள் போல் உள்ளனர் என்று கூறி அடுத்த சச்சரவை துவக்கி வைத்துள்ளார். இதனை சமாளிப்பதற்காக, இது போன்ற கருத்துகளை ஏற்றுக் கொள்ள முடியாது என காங்கிரஸ் கூறியுள்ளது.

சர்ச்சை

காங்கிரஸ் கட்சியின் அயலக அணி பொறுப்பாளரான சாம் பிட்ரோடா டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‛‛அமெரிக்காவில் பரம்பரை வரி என்று ஒன்று இருக்கிறது. ஒருவருக்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் சொத்துகள் இருந்தால், அதில் அவருடைய வாரிசுகள் 45 சதவீதத்திற்கு மட்டுமே உரிமை கோரி, பெற முடியும். 55 சதவீதத்தை அரசு எடுத்துக் கொள்ளும். இந்தியாவில் அப்படி ஏதும் இல்லை. ஒருவருக்கு ரூ.100 கோடி சொத்து இருந்தால், அத்தனையும் வாரிசுகளுக்கே சென்றடையும். இதுபோன்ற விஷயங்களை விவாதிக்க வேண்டும்'' எனக் கூறியிருந்தார். இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தங்களின் கருத்து அல்ல என காங்கிரஸ் கூறியது. பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள் இந்த விவகாரத்தை அரசியல் பிரசாரங்களில் எழுப்பி காங்கிரசை கடுமையாக விமர்சித்தனர்.

பேட்டி

இந்நிலையில் சாம் பிட்ரோடா ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: சில சண்டைகளை விட்டுவிட்டு மக்கள் ஒன்றாக வாழக்கூடிய மகிழ்ச்சியான சூழலில் 75 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். கிழக்கில் உள்ளவர்கள் சீனர்களைப் போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போலவும், வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்களைப் போலவும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்ரிக்கர்களைப் போன்று தோற்றமளிக்கிறார்கள். இந்தியாவைப் போன்ற பலதரப்பட்டோர் வாழும் தேசத்தை மகிழ்ச்சியாக வைத்து இருக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார். இவரது இந்த கருத்து தற்போது சர்ச்சை ஆகி உள்ளது. பா.ஜ.,வினர் சாம் பிட்ரோடாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

கோபம்

தெலுங்கானாவில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது; தென் இந்தியர்களை ஆப்ரிக்கர் என்கிறார் சாம் பிட்ரோடா. தென் இந்தியர்களை நிறத்தை வைத்து காங்கிரஸ் விமர்சிக்கிறது. சாம்பிட்ரோடா, காங்கிரஸ் இளவரசரின் ஆலோசகராகவும், நண்பராகவும் உள்ளார். காங்கிரஸ் கட்சியின் 3வது நடுவராகவும் உள்ளார். பிட்ரோடாவின் கருத்துகள் கோபத்தை ஏற்படுத்தியது. இந்த இனவெறி கருத்து குறித்து காங்கிரஸ் இளவரசர் பதிலளிக்க வேண்டும். ஒருவரின் நிறம் அவரது நாட்டின் அடையாளத்தை வெளிப்படுத்துமா என கேள்வி எழுப்பினார்.

சமாளிப்பு

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: இந்தியாவின் பன்முகத்தன்மையை விளக்குவதற்காக சாம்பிட்ரோடா தெரிவித்த கருத்துகள் துரதிஷ்டவசமானது. ஏற்றுக் கொள்ள முடியாதது. இந்த விவகாரத்தில் இருந்து காங்கிரஸ் முற்றிலும் விலக்கி கொள்கிறது எனக்கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 60 )

Sainathan Veeraraghavan
மே 10, 2024 19:23

சாம் பிட்ரோடா பேசாமல் அமெரிக்காவிலேயே இருக்க வேண்டும் பிட்ரோடா இனவெறி பிடித்தவர் காங்கிரஸ் கட்சி ஜூன் தேதிக்கு பிறகு அழிந்து போகும் யாராலும் காப்பாற்ற முடியாது பிட்ரோடா போன்ற பயித்தங்களை காங்கிரஸ் தன் கட்சியில் வைத்து இருக்கிறது


C.SRIRAM
மே 10, 2024 18:38

இந்த கூமுட்டை நபர் குரங்கன் அல்லது மிருகம்


SARAVANAN A
மே 09, 2024 10:51

இந்தியாவின் பன்முகத்தன்மை என்பதற்கு இப்படி ஒரு வித்தியாசமான விளக்கமா? எங்கும் கேட்டிராத நல்ல சிந்தனை


veeramani
மே 09, 2024 09:52

வெட்டப்பட்ட கை கட்சியின் தலைவர் திரு சாம்ப்ரெட்டு அவரின் கூற்று முழுவதும் உண்மை ஒரு ஜேர்மன் கட்டுரை படி த்துள்ளேன் உலகில் உள்ள மனிதர்களின் ஜீன்களை பற்றியது உலகின் மக்களை தோராயமாக மூன்று விதமாக தரம்பிரித்துள்ளனர் செங்கிசுகான் ஜீன் இந்தியாவின் மேற்கு வங்காளம், சிக்கிம் அசாம் அருணாச்சலம் மணிப்பூர் திரிபுர நாகலாந்து ஒரிசா போன்ற மாநிலங்களில் வசிப்பவர்கள் மேலும் பஞ்சாப் , ராஜஸ்தான் காஷ்மீர் உ பி , ம பி , குஜராத்தி பிஹாரி போன்ற மாநில இனத்தவர் ஜங்கள் அரேபியர்களின் வகை கர்நாடகம் ஆந்திரா தெலுங்கானா வடக்கு தமிழகம் போன்றவர்களின் ஜீன் க ள் திராவிடம் அல்லது ஆப்ரிக்கா இநத்ஹட்டவரின் வகை சேர்ந்தது தமிழக தென் மாவட்டங்கள், கேரளா சரிபாதி மக்களின் ஜீன்கள் தனித்தன்மையுடன் உள்ளது லாஜிக்காக யோசித்தால் தமிழக மாற்று கேரளா தென் பகுதி மக்கள் முதலில் கங்கை சிந்து நதிக்கரை வசித்து, பின்னர் அரேபியர்களின் வருகையால் விரட்டப்பட்டு இந்திய தென் பகுதி சென்று கடைசியில் அங்கு மலைகளில் தஞ்சம் புகுந்து வாழ்ந்து இருக்கலாம் இவர்களே இந்தியாவின் பூர்வ குடிமக்கள் இந்திய அரசு இவர்களுக்கு பூர்வ கு டி கள் சிவப்பு இந்தியர்கள் போல தனி அந்தஸ்த்து கொடுக்கவேண்டும் இவர்கள் தலித், மலை வால் மக்களின் முன்னோர்கள்


Kanagaraj M
மே 09, 2024 08:48

இதில் யார் இம்மண்ணின் பூர்வ குடிகள் என்று சாம் அவர்களுக்கு தெரியாமலா இருக்கும்?


V RAMASWAMY
மே 09, 2024 07:49

இதைக்கேட்ட பின்புமா காங்கிரசுடன் கூட்டணி? தாய்நாட்டுப் பற்றுடையவர்கள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள்


ராமகிருஷ்ணன்
மே 09, 2024 07:14

ஒத்து கொள்ள மாட்டார்கள்.


venugopal s
மே 08, 2024 23:18

இப்போது இங்கு வந்து வீராவேசமாக கம்பு சுற்றும் சங்கிகள் மத்திய பாஜக அரசின் இணை அமைச்சர் திருமதி ஷோபா அவர்கள் பெங்களூரு குண்டு வெடிப்பை தமிழர்கள்‌ தான் செய்தார்கள் என்று வீண் பழி சுமத்திய போது எங்கு போய் இருந்தார்கள்?


Kumar Kumzi
மே 10, 2024 11:14

வித்தியாசமே இல்லை


spr
மே 08, 2024 20:26

இவர்தான் காங்கிரசின் அயலக அணித்தலைவர் மேலை நாட்டுச் செய்தித்தாள்களுக்கு தன்னையொரு "அறிவுஜீவி" என நினைக்கும் இவர் போன்றோர் வாயைக் கிளறி இந்தியாவுக்கு குறிப்பாக மோடிக்கு எதிராக கருத்து சொல்ல வைத்து அதனைப் பரப்புவதே தொழிலாக உள்ளது இந்த அறிவிலிகள் வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்கிறார்கள் ஒரு இனத்தவரின் நிறத்தைக் குறிப்பிட்டு அது ஒரு வேறுபாடு எனக் கூறி அத்தகையோரையும் அரவணைத்துச் செல்கிறோம் என்பது சரியா? எதுகுறித்துக் கருத்துத் தெரிவிக்கலாம் என்றொரு கட்டுப்பாடில்லாத வடநாட்டுக் கமலஹாசன்


venugopal s
மே 08, 2024 20:17

இவரைப் போல் நாக்கில் சனி பிடித்தவர்கள் பாஜகவிலும் நிறையப் பேர் உள்ளனர். காங்கிரஸ் கட்சியாவது இவரைக் கட்சியிலிருந்து நீக்கி இவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் பாஜகவில் இவரைப் போல் பேசுபவர்கள் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் மறைமுகமாக ஆதரிப்பார்கள்!


Gokul Krishnan
மே 09, 2024 10:37

இந்திரா காந்தியை, காமராஜரை தர குறைவாக பேசிய தானை தலைவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி