உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குவியும் எஸ்.ஐ.ஆர்., மனுக்களால் சுப்ரீம் கோர்ட் வேதனை! அரசியல்வாதிகள் விளம்பரம் தேடுவதாக விமர்சனம்

குவியும் எஸ்.ஐ.ஆர்., மனுக்களால் சுப்ரீம் கோர்ட் வேதனை! அரசியல்வாதிகள் விளம்பரம் தேடுவதாக விமர்சனம்

எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிராக, மாநில அரசுகள் வரிசையாக மனுக்களை தாக்கல் செய்வது வேதனை அளிப்பதாக உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்த விஷயத்தில், அரசியல் கட்சிகள் விளம்பரம் தேடுவதாகவும் விமர்சித்துள்ளது. பீஹாரில் கடந்த மாதம் சட்டசபை தேர்தல் நடந்த நிலையில், அங்கு முன்னதாக எஸ்.ஐ.ஆர்., பணிகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. இதற்கு, 'இண்டி' கூட்டணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் உட்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆர்., பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் இருந்து தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டுள்ளன.

காலக்கெடு

எஸ்.ஐ.ஆர்., பணிகள் நடக்கும் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான மனுக்களை அரசியல் கட்சியினர், தனி நபர்கள் மற்றும் சமூக அமைப்பினர் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி ஜாய்மாலா பக்சி அடங்கிய அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உத்தர பிரதேச அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'நிலப்பரப்பிலும், மக்கள் தொகையிலும் பெரிய மாநிலம் என்பதால், எஸ்.ஐ.ஆர்., பணிகளுக்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்' என, வாதாடினார். தமிழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்காக ஆஜரான வழக்கறிஞர், 'தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் பணி நிமித்தமாக வெளியூர், வெளி மாநிலங்களுக்கு சென்றுள்ளனர். கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகை விடுமுறை வருவதால், பலர் வெளியூர் செல்ல வாய்ப்பு உள்ளது. ''இதனால், எஸ்.ஐ.ஆர்., பணியின் கா லக்கெடுவை நீட்டிக்க வேண்டும். நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என, கோரினார். அனைத்து தரப்பினரின் வாதங்களை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: எஸ்.ஐ.ஆர்., விவகாரத்தில் பல்வேறு தரப்பினர் தொடர்ந்து மனுக்கள் தாக்கல் செய்து வருவது விரக்தி அளிக்கிறது. தனி நபரோ, அரசியல் கட்சியினரோ, விளம்பரம் தேட இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்கின்றனரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

விசாரணை

பெரும்பாலானோர் தாக்கல் செய்த மனுக்களில், தனித்துவமான பிரச்னை இருப்பது தெரிகிறது. இந்த விவகாரத்தை, அனைவரும் தீவிர அரசியலாக்க முயல்கின்றனர். மேலும் மேலும், மனுக்களை தாக்கல் செய்து, இந்த விவகாரத்தை அரசியலாக்கி கொண்டே இருங்கள். தொடர்ந்து மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதால், எஸ்.ஐ.ஆர்., விவகாரத்தில் மாநில வாரியாக விசாரணை நடத்த அமர்வு முடிவு செய்துள்ளது. இந்த விஷயத்தில், பீஹார் தொடர்புடைய வழக்குகளை முதலில் விசாரித்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே, மற்ற மாநிலங்கள் தொடர்ந்த வழக்குகள் மீது உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். மேற்கு வங்கத்தில், எஸ்.ஐ.ஆர்., பணியில் ஈடுபடும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இங்கு, தேர்தல் அலுவலகங்கள் முற்றுகையிடப்பட்ட சம்பவங்கள் கவலை அளிக்கிறது. இதுபோன்ற, அராஜக செயல்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இந்த மனு குறித்து மத்திய அரசும், தேர்தல் கமிஷனும் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது.வடகிழக்கு மாநிலமான அசாம், எஸ்.ஐ.ஆர்., நடைமுறையில் இருந்து விடுபட்டது ஏன் என்பது குறித்தும் பதிலளிக்க தேர்தல் கமிஷனுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். கேரளாவில், எஸ்.ஐ.ஆர்., நடைமுறைகளை மேலும் நீட்டிக்க கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை வரும் 18ம் தேதி ஒத்திவைக்கப்படுகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு, மாநில அரசுகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. - டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

S.V.Srinivasan
டிச 10, 2025 10:10

மனுக்களை குப்பையில் போட்டு விட்டு கேஸ் எடுக்க முடியாது என்று கூறிவிடுங்கள் நீதிபதி அவர்களே. எதிர் கட்சி ஆட்களுக்கு வேறு வேலை இல்லை.


vbs manian
டிச 10, 2025 08:35

இறந்து போனவர் புலம் பெயர்ந்தோர் வோட்டுக்களால் ஆட்சியில் உள்ளவர்களுக்கு அடி வயிறு கலங்குகிறது,.


GMM
டிச 10, 2025 08:02

தேர்தல் ஆணையம் மனுக்கள் பெறலாம். SIR பணி இடையில் உச்ச நீதிமன்றம் சரியான ஆதாரம் இல்லாமல், விசாரிப்பது சரியல்ல. நடந்து முடிந்த பீகார் தேர்தலை விசாரிக்கும் போது நடந்து முடிந்த தமிழக MP,MLA தேர்தல் பற்றியும் விசாரிக்க வேண்டும். தவறாக அதிகாரம் பயன் படுத்தும் பலர் விரைவில் அதிகாரம் இழப்பர். தேர்தல் சீர்குலைப்பு நாடகம். தேர்தல் இல்லையென்றால், நீதியை , சட்டத்தை சீர்குலைத்து விடுவர். தேர்தல் ஆணையம் சட்ட, பாராளுமன்ற தொகுதி இந்திய குடிமக்களுக்கு வாக்குரிமையை உறுதி படுத்துகிறது. ஒருவர் இந்திய குடிமகனா? என்று கேள்வி கேட்க தேர்தல் ஆணையம் முழு அதிகாரம் பெற்றது. காங்கிரஸ், திமுக மக்கள் செல்வாக்கை இழந்து விட்டனர். ? அதனால் பதட்டம்.


ஜெய்ஹிந்த்புரம்
டிச 10, 2025 07:50

வடகிழக்கு மாநிலமான அசாம், எஸ்.ஐ.ஆர்., நடைமுறையில் இருந்து விடுபட்டது ஏன்?


ஜெய்ஹிந்த்புரம்
டிச 10, 2025 07:48

ஒரு யூதப் பழமொழி. உன்மேல் ஒருவன் நீ கழுதை என்று குற்றம் சாட்டினால், அவனைப் பொருட்படுத்தாதே ஆனால் இருவர் உன்னைக் கழுதை என்று அழைத்தால், உனக்கென ஒரு சேணம் தேடு. இந்தப் பழமொழி ஒருவன் உன்னைப் பற்றி மட்டும் குறை சொன்னால், அதைக் கவனத்தில் கொள்ளத் தேவையில்லை என்று கூறுகிறது. ஆனால், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டோர் உன்னிடம் ஒரே குறையைச் சுட்டிக்காட்டினால், அது உன்னிடம் இருக்கும் ஒரு குறைபாடாகவோ அல்லது தவறான நடத்தையாகவோ இருக்கக்கூடும் என்று நீ உணர்ந்து, அதனைத் திருத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. அதாவது, ஒருவரின் தனிப்பட்ட விமர்சனத்தை விட, பலரின் பொதுவான கருத்துக்குச் செவிசாய்த்து, சுயபரிசோதனை செய்து, தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்ற முக்கியமான பாடத்தை இந்த ஞானமான சொல் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. இந்த பாடம் உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம், இவர்களுக்கும் பொருந்தும் இல்லையா?


duruvasar
டிச 10, 2025 08:49

ஒட்டகத்தின் மீது ஏறினாலும் நாய் உன்னை கடிக்கும் என்று ஒரு அரபிய பழமொழி உள்ளது. அதாவது ஒரு நாய் வெறிகொண்டு உன்னை கடிக்க வந்தால் அங்கிருக்கும் ஒட்டகத்தின் மீது ஏறினாலும் அது கடிக்கவரும் என்பதுபோல இந்த மூடர் கூட்டம் உயர்நீதிமன்றத்திலும் துரத்திக்கொண்டு வருவதை நிறுத்தவேண்டும்.


Kasimani Baskaran
டிச 10, 2025 04:04

செத்தவர்களுக்கும் வாக்குரிமை வேண்டும் என்று கேட்பது நிச்சயம் அந்தக்கட்சிகளின் நிலைப்பாடு என்றால் தேர்தல் முறையை மட்டுமல்லாது ஜனநாயகத்தையே கேவலப்படுத்துவது ஆகும். இன்னும் நான்கு மாதம் இருக்கும் பொழுது திருத்தும் முடியாது, தாமதமாகும் என்றால் - 5 வருடம் முடிந்ததும் கவர்னர் ஆட்சியை அமல்படுத்தி அதற்குள் திருத்தம் முடித்து தேர்தல் வைக்கலாம். தீம்க்காவை ஆட்சியில் வைத்து நேர்மையாக தேர்தல் நடக்கும் என்று சொல்ல வாய்ப்பே இல்லை.


Minimole P C
டிச 10, 2025 03:44

SC gives long rope to political parties. It may ask them to wait until first tentative voters list to be published for correction. For practical difficultirs it may ask them, to approach ECI. All petitions are mostly on assumption or presumption. How it is correct?


A viswanathan
டிச 10, 2025 07:28

நாட்டின் ஸ்திரத்தன்மையை தங்களுடைய‌ சுய லாபத்திற்காக எதிர்க்கட்சிகள் மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் இருக்கும் போது நீதிமன்றங்களை நாடி கொண்டு மக்களை குழப்பிகின்றார்கள்.வேதனைக்குறிய விஷயம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை