உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீதிமன்றங்கள் மீது அவதுாறு பரப்புவதா? சி.பி.ஐ.,க்கு சுப்ரீம் கோர்ட்கண்டிப்பு! :

நீதிமன்றங்கள் மீது அவதுாறு பரப்புவதா? சி.பி.ஐ.,க்கு சுப்ரீம் கோர்ட்கண்டிப்பு! :

புதுடில்லி மேற்கு வங்கத்தில், 2021 தேர்தலுக்கு பின் அரங்கேறிய வன்முறை தொடர்பான வழக்குகளை, அம்மாநிலத்திற்கு வெளியே மாற்றக்கோரிய வழக்கில், ஒட்டுமொத்த நீதிமன்றங்கள் மீதும் அவதுாறு குற்றச்சாட்டுகள் பரப்பியதற்காக, சி.பி.ஐ.,க்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.மேற்கு வங்கத்தில், 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில், திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி தொடர்ந்து மூன்றாவது முறையாக வென்று முதல்வரானார்.தேர்தலுக்கு பின், மாநிலத்தின் பல்வேறு பகுதி களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.இந்த வழக்கு விசாரணையை, மேற்கு வங்கத்திற்கு வெளியே மாற்றக்கோரி, 2023 டிசம்பரில் உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ., மனு தாக்கல் செய்தது. விசாரணைஅதில், 'மேற்கு வங்க நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை நடந்தால் நியாயமாக இருக்காது; சாட்சிகள் மிரட்டப்படலாம்' என, குறிப்பிடப்பட்டிருந்தது.இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, சி.பி.ஐ., தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டார் ஜெனரல் எஸ்.வி.ராஜுவிடம், நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.நீதிபதிகள் கூறியதாவது:எதன் அடிப்படையில் சி.பி.ஐ., இது போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது? ஒட்டுமொத்த நீதித்துறை மீதும் நீங்கள் எப்படி அவநம்பிக்கை கொள்ள முடியும்? மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் விரோதமான சூழல் நிலவுவது போல் சி.பி.ஐ., கூறுகிறது.ஒரு குறிப்பிட்ட நீதிபதி அல்லது குறிப்பிட்ட மாநிலத்தை, சி.பி.ஐ.,க்கு பிடிக்காமல் போகலாம். அதற்காக ஒட்டுமொத்த நீதித்துறையும் செயல்பட வில்லை என கூற முடியாது.வாபஸ்உங்களின் இது போன்ற குற்றச்சாட்டுகளுக்காக நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், சிவில் நீதிபதிகள் உள்ளிட்டோர் இங்கு வந்து தங்களை தற்காத்துக் கொள்ள முடியாது. மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்கள் மீதும் அவதுாறான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. சி.பி.ஐ., இது போன்ற செயலில் ஈடுபட்டது, மிகவும் துரதிர்ஷ்டவசமானது.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.இதன் பின், “நீதிமன்றங்கள் மீது அவதுாறை ஏற்படுத்தும் எண்ணம் இல்லை,” எனக் கூறிய கூடுதல் சொலிசிட்டார் ஜெனரல் எஸ்.வி.ராஜு, மனுவை வாபஸ் பெற அனுமதிக்கும்படி கோரினார். இதற்கு நீதிபதிகள் ஒப்புதல் அளித்ததை அடுத்து, மனு வாபஸ் பெறப்பட்டது.

நீதிபதிகள் நியமனத்தில் தாமதம் ஏன்?

உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்துக்கான பரிந்துரைகளை, தலைமை நீதிபதி அடங்கிய உச்ச நீதிமன்ற கொலீஜியம் அளித்து வருகிறது.கொலீஜியம் அளிக்கும் பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரிக்க முடியாது. ஆனால், முடிவு எடுக்காமல் கால தாமதம் செய்ய முடியும். இந்நிலையில், உச்ச நீதிமன்ற கொலீஜியம் அளிக்கும் பரிந்துரைகள் மீது முடிவெடுக்க மத்திய அரசுக்கு காலக்கெடு விதிக்க உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் ஹர்ஷ் விபோர் சிங்கால் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவு:உச்ச நீதிமன்ற கொலீஜியம் என்பது நீதிபதிகள் நியமனத்துக்கான தேடல் கமிட்டி அல்ல. அதன் பரிந்துரைகளை மத்திய அரசு நிறுத்தி வைக்க முடியாது. நீதிபதிகள் நியமனத்துக்காக கொலீஜியம் பரிந்துரைத்த பெயர் பட்டியல் ஏன் இன்னும் பரிசீலிக்கப்படவில்லை? அதன் தற்போதைய நிலை என்ன என்பதை காரணங்களுடன் அரசு தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி கால அவகாசம் கேட்டதை தொடர்ந்து விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Rajasekar Jayaraman
செப் 21, 2024 13:50

மேற்கு வங்கத்தில் இவ்வளவு நடந்த பிறகும் சுப்ரீம் கோர்ட் பிடிவாதம் ஏனோ.


venugopal s
செப் 21, 2024 11:27

பாஸ் சொன்னதைத் தானே அடியாள் செய்வார். அடியாள் மீது கோபப்பட்டு என்ன பிரயோஜனம்?


தமிழ்வேள்
செப் 21, 2024 10:14

நீதிமன்றங்களுக்கு காங்கிரஸ் பாகிஸ்தான் இடதுசாரி அடிமைத்தனம் நீங்காத வரை விமர்சனங்கள் இருந்து கொண்டே இருக்கும்.... நீதியரசர்கள் தங்கள் மனத்தால் இன்னும் ஐரோப்பியர்களாகவே இருக்கும் போது எப்படி நீதித்துறை பாரத தேசத்துக்கானதாக இருக்க இயலும்?


Dharmavaan
செப் 21, 2024 09:44

தீர்வு கோலீஜியும் முறை நீக்கப்பட வேண்டும் .நீதிகள் ஐ ஏ எஸ் ஐ பி எஸ் போல் தேர்வு மூலம் நியமிக்கப்பட வேண்டும் நீதிகளுடைய தரத்தை யார் சோதித்து பார்த்தது.மக்கள் பார்லிமென்டுக்கு ஆள அதிகாரம் கொடுத்துள்ளனர் எனவே நீதிமன்றங்கள் ஜனாதிபதி கட்டுக்குள் வர வேண்டும் உலகில் எங்குமே இல்லாத தானே நியமித்துக்கொள்ளும் கொலீஜியும் முறை சட்டம் விரோதம்


ஆரூர் ரங்
செப் 21, 2024 09:28

அவதூறு பரப்ப வெளியாட்களின் அவசியமேயில்லை.


GMM
செப் 21, 2024 09:07

நீதிமன்றங்கள் மீது அவதூறு இல்லை. மேற்கு வங்கத்தில் சாட்சிகள் மிரட்டப்படலாம் , விசாரணை வேறு மாநிலத்திற்கு மாற்ற கூறுவது தவறு இல்லை. பல வழக்குகளில் மாற்றப்பட்டுள்ளன . நீதிமன்றம் அரசு விசாரணை அமைப்புகளை கண்டிப்பதை நிறுத்த வேண்டும். அவை மக்களுக்கு சேவைசெய்யும் அமைப்புகள். அவைகளை மன சோர்வு அடைய செய்ய நீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது. நீதிமன்றம் சிலர் தாவாவை மட்டும் குறைக்கும் அமைப்பு. நீதிமன்ற செயல்பாடுகளுக்கு மீடியா அதிக முக்கியத்துவம் தருவதால் , மக்கள் விரும்புகிறார்கள் என்று பொருள் அல்ல. பல குடும்பங்கள், நிறுவனங்கள் நீதிமன்ற வழக்குகளால் சிதைந்து விட்டன . உண்மையை வாதிகள் கூற வாய்ப்பு இல்லை. அரசு நிர்வாகத்தில் பரிந்துரையை நிறுத்த , மாற்ற, நிராகரிக்க முடியும். பரிந்துரைக்கு கால கெடு வேண்டும் என்றால் , வழக்கிற்கும் கால கெடு வேண்டும்.


sankaranarayanan
செப் 21, 2024 09:05

பிற மாநிலங்களில் உள்ள உயர்நீதி மன்றங்கள் அளித்த தீர்ப்பை எதற்காக உச்ச நீதி மன்றம் மரு பரிசிலனை செய்து தண்டிக்கப்பட்டவர்களை விடுவிக்கின்றன தேவையில்லாமல் உயர்நிதி மன்றங்கள் தீர்ப்பை நிறுத்திவைத்து அவர்களுக்கு முன் ஜாமீனும் ஏன் உச்ச நீதிமன்றம் வழங்குகிறது அரசின் கோட்பாட்டுக்கு எதிராகவே இவைகள் உள்ளன ஜாமீனில் வெளிவந்த அனைவரும் பின்பும் அமச்சர் ஆகவே இருக்கிறாரார்கள் அதே தவறுகளை திரும்பவும் செய்கிறார்கள் இதற்கு விடிமோட்சமே கிடையாதா


VENKATASUBRAMANIAN
செப் 21, 2024 08:25

அப்பறம் ஜெயலலிதா வழக்கு ஏன் மாற்றப்பட்டது. இதேபோல் பல உதாரணங்கள் உண்டு. மக்களுக்கு நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை குறைகிறது. இது போன்ற வாதங்கள் அதை உறுதி செய்கிறது


Barakat Ali
செப் 21, 2024 08:21

நக்சல் சிந்தனையுடைய உச்சம் .......... இந்த நாட்டின் சாபக்கேடு ...........


Barakat Ali
செப் 21, 2024 08:20

சி பி ஐ யின் அதிகாரத்தை முடக்க / குறைக்க உச்சம் பரிந்துரைத்தாலும் வியப்பதற்கு இல்லை ......