உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவின் வளர்ச்சியை சீர்குலைக்க சதி ! மக்கள் சுதாரிக்க ஆர்.எஸ்.எஸ்., அறிவுரை

இந்தியாவின் வளர்ச்சியை சீர்குலைக்க சதி ! மக்கள் சுதாரிக்க ஆர்.எஸ்.எஸ்., அறிவுரை

நாக்பூர்:“நம் நாடு பொருளாதார ரீதியில், கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. சர்வதேச அளவில் தனி மரியாதையும் பெற்று வருகிறது. ஆனால், இதை கெடுப்பதற்கு பல முனைகளில் இருந்தும் சதிகள் நடக்கின்றன. இந்த விஷயத்தில் மக்கள் சுதாரிப்புடன் இருக்க வேண்டும்,” என ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் கூறினார்.மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., தலைமையகத்தில், விஜயதசமியையொட்டி ஆண்டுதோறும் நடக்கும் பேரணி நடந்தது.

அதை துவக்கி வைத்து, மோகன் பகவத் பேசியதாவது:

சூழ்நிலை நமக்கு சாதகமாக இல்லாத போதும், தனிப்பட்ட மற்றும் நாட்டின் மீதான நம்பிக்கையில் ஒவ்வொருவரும் உறுதியுடன் இருந்தால் வெற்றியைத் தடுக்க முடியாது. கடந்த 10 ஆண்டுகளில் உலக அளவில் இந்தியா வலுவானதாகவும், மரியாதைக்கு உரியதாகவும் உயர்ந்துள்ளதை ஒவ்வொருவரும் உணர்கின்றனர். மக்களின் ஒட்டுமொத்த குணங்களே நாட்டை வலுவாக்கும்.ஜம்மு - காஷ்மீரில் தேர்தல் அமைதியாக நடந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. மக்கள், அரசு மற்றும் நிர்வாகத்தினால், உலக அளவில் நம் நாடு குறித்த கண்ணோட்டம், பெருமை உயர்ந்து வருகிறது. ஆனால், இதை சீர்குலைக்க சிலர் சதி செய்கின்றனர்.ஒரு நிலைக்கு மேல் இந்தியா முன்னேறுவதை அவர்கள் ஏற்கத் தயாராக இல்லை. நாட்டை பலவீனப்படுத்த, குழப்பங்கள் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். தங்களை ஜனநாயகவாதிகளாக, உலக அமைதிக்காக போராடுவதாகக் கூறும் இவர்கள், சிலரது பின்புலத்தில் நம் நாட்டுக்கு எதிராக செயல்படுகின்றனர்.வங்கதேசத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்ட போது, இந்தியாவை எதிரியாக சித்தரிக்கும் முயற்சி நடந்தது. முஸ்லிம்களுக்கு எதிரான நாடு இந்தியா என்று, ஒரு போலி பிம்பத்தை உருவாக்கியது யார் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.தங்களுடைய சுய தேவைகளுக்காக, நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, பெருமைக்கு எதிராக சிலர் செயல்படுகின்றனர்.அரசியல் போட்டியில், நாட்டின் நலனை இரண்டாம் நிலையிலேயே வைத்திருக்கின்றனர். மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவது, மத ரீதியில் பிரச்னை ஏற்படுத்துவது போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். விநாயகர் ஊர்வலத்தில் கல் வீசுகின்றனர்.மேற்கு வங்கத்தில் நடந்த பாலியல் பலாத்கார கொலையில் குற்றவாளியைக் காப்பாற்றுகின்றனர். இதுவே இவர்களின் அரசியல்.இவ்வாறு மோகன் பகவத் பேசினார்.

பதிலடி கொடுப்போம்: ராஜ்நாத் உறுதி

மேற்கு வங்க மாநிலம் சுக்னா ராணுவ மையத்தில் நடந்த ஆயுத பூஜையில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:இந்தியா எந்த ஒரு நாட்டின் மீதும் போர் தொடுத்தது இல்லை. இன்னொரு நாட்டின் நிலத்தை அபகரிக்க முயன்றதில்லை. ஆனால், நம் நலன்கள் பாதிக்கப்பட்டால், நமக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், நம் ராணுவம் மிகப்பெரும் நடவடிக்கைக்கு, தன் முழு பலத்தை பயன்படுத்தும்.நம்மை யாராவது அவமதித்தால் அல்லது நம்முடைய ஒற்றுமை மற்றும் இறையாண்மையை சேதப்படுத்த முயன்றால் அல்லது மதம், உண்மை, மனித மதிப்புகளுக்கு எதிராக போர் தொடுத்தால், அப்போது நாம் சண்டையிடுவோம். இதுதான் நாம் கற்றது; இதுதான் நம் பாரம்பரியம்.நம் நாட்டின் நலன்கள் அச்சுறுத்தப்பட்டால், மிகப்பெரும் நடவடிக்கை எடுக்க நாம் தயங்க மாட்டோம். முழு பலத்துடன் பதிலடிக்கு தயாராக உள்ளோம்.ஆயுத பூஜை அதையே உணர்த்து கிறது. ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை முழுமையாக பயன்படுத்தத் தயங்க மாட்டோம்.இவ்வாறு அவர் பேசினார்..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

SIVA
அக் 14, 2024 08:10

திருடன் திருடன் என்று திருட்டு பெயர் வைத்து உள்ள ராகுல் பெரோஸ் கான் ஏன் தெரு தெருவாய் கத்தி பிரச்சாரம் செய்து பின்னர் உச்ச நீதி மன்றம் சென்று மன்னிப்பு கேட்டார் ..... ஆர் எஸ் எஸ் மட்டும் இல்லை என்றால் எல்லாரும் இங்கு தெருவில் உக்கார்ந்து காஜாவுக்கு பட்டன் தான் தைத்து கொண்டு இருப்பீர்கள் , இப்படி உக்கார்ந்து அவரக்ளுக்கு எதிராக ஜனநாயகம் என்ற பெயரில் பொய் பிரச்சாரம் செய்ய முடியாது ...


Hajamohaideen
அக் 14, 2024 06:49

திருடனே திருடன் திருடன்னு கத்துனது போல இருக்கு. நீங்கள் மட்டும் இல்லேனா எப்பவோ நாடு வல்லரசு ஆகியிருக்கும்.


Dhurvesh
அக் 13, 2024 22:35

செய்றவனே சொல்றது கேவலம்


பேசும் தமிழன்
அக் 13, 2024 20:09

சதி செய்பவர்களுக்கு ஆதரவாக இத்தாலி பப்பு மற்றும் இண்டி கூட்டணி ஆட்கள் செயல்பட்டு வருகிறார்கள் ....அது ஊரறிந்த ரகசியம் தானே !!!


SIVA
அக் 13, 2024 20:05

அப்ப நீங்க வேணுமுன்னா அமைதி பூங்காவாக திகழும் பாகிஸ்தான், பங்களாதேஷ் , லெபனான் போன்ற இடங்களுக்கு சென்று எந்த வித அச்சம் இல்லாமல் நிம்மதியாக வாழுங்கள் ,


sundaran manogaran
அக் 13, 2024 17:04

நாட்டின் உண்மை நிலையை தெளிவாக கூறியுள்ளார்.ஆனால் இங்கு இருக்கும் கார்ப்பரேட் கம்பெனி கட்சிகள் தங்கள் வியாபார நோக்கில் மக்களைக் குழப்புகின்றனர்.இதற்கு ஊடகங்களும் துணை போகின்றன.மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


பெரிய ராசு
அக் 13, 2024 14:11

முஸ்லிம்களுக்கு எதிரான நாடு இந்தியா..மிகச்சரியன சொல் ...இந்திய இந்துக்களுக்கே , பாக்கிஸ்தான் முசுலீம் என்று ஆகும் பொழுது இந்திய இந்துக்களுக்கே


Subash BV
அக் 13, 2024 12:06

NONSENSE. RAISE YOUR VOICE TO GET BACK TEMPLES FROM GOVTS. WE WOULD HAVE AVOIDED TTD LADDUS SCAM. PUT HINDUISM FIRST.


Subash BV
அக் 13, 2024 12:03

All fake politics Guy calling themselves a hindu organization, never supports hindus causes. TEMPLES GETTING LOOTED BY GOVTS FROM DAY ONE IN THIS SECULAR NATION. HAVE THEY RAISED ANY VOICE. MAIN REASON WHY TTD LADDUS SCAM HAPPENED. Had it been with the devotees, they would have managed well like other religions. WAKE UP. BEFORE SUCH NONSENSE HAPPENS AGAIN IN OTHER TEMPLES. PUT HINDUISM FIRST.


வைகுண்டேஸ்வரன்
அக் 13, 2024 11:17

மைண்ட் வாய்ஸ்னு நினைத்து சத்தமா பேசிட்டார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை