உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கொள்கைகளை மாற்றாவிட்டால் சிக்கல்: இந்தியாவுக்கு உலக வங்கி எச்சரிக்கை

கொள்கைகளை மாற்றாவிட்டால் சிக்கல்: இந்தியாவுக்கு உலக வங்கி எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள், தங்களது பொருளாதாரக் கொள்கைகளை மாற்றவில்லை என்றால், நடுத்தர வருமான பிரிவிலேயே அவை சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளதாக, உலக வங்கி எச்சரித்துள்ளது. இதுகுறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 1990ம் ஆண்டு முதல் தற்போது வரை, மொத்தம் 34 நாடுகள் மட்டுமே, நடுத்தர வருமான பிரிவிலிருந்து அதிக வருமானம் ஈட்டும் பிரிவுக்கு முன்னேறி உள்ளன.

மாற்ற வேண்டும்:

இதையடுத்து, தற்போது நடுத்தர வருமான பிரிவில் உள்ள நாடுகள், அதிக வருமானம் ஈட்டும் பிரிவுக்கு முன்னேற, பல அற்புதங்களைச் செய்தால் மட்டுமே, அந்த நிலையை எட்ட முடியும். பழைய யுக்திகளையே பயன்படுத்தி முன்னேற நினைப்பது என்பது, முதல் கியரில் காரை இயக்கி, வேகமாக செல்ல முயற்சிப்பதற்கு சமம் ஆகும். இதனால் எந்த பயனும் இல்லை. நடுத்தர வருமான பிரிவில் உள்ள 108 நாடுகளின் பெரிய பிரச்னை என்னவென்றால், வழக்கமாக வளர்ச்சியடைய பயன்படுத்தி வந்த வழிகள் இல்லாமல் போய்விட்டன; அல்லது, தற்போது செயலிழந்து வருகின்றன என்பது தான். இந்த நாடுகளின் மற்றொரு பிரச்னை, இவை பணக்கார நாடாக மாறுவதற்கு முன்பே, வயதானவர்களை கொண்ட நாடாக மாறிவிடும் நிலையில் உள்ளன. போதாக்குறையாக, பருவ நிலை மாற்றம் கூடுதல் சவாலை ஏற்படுத்துகிறது. பருவ நிலை மாற்றத்துக்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக் கொள்ள, பணக்கார நாடுகளைக் காட்டிலும் ஏழை நாடுகளுக்கே அதிக செலவாகும். இதனால், நடுத்தர வருமான பிரிவில் உள்ள நாடுகள், தங்களது கொள்கைகளை மாற்றியே ஆக வேண்டும். அவ்வாறு செய்யவில்லையென்றால், அமெரிக்க தனிநபர் வருமானத்தில் 25 சதவீதத்தை அடைய, சீனாவுக்கு 10 ஆண்டுகளுக்கு கூடுதலாகவும்; இந்தோனேஷியாவுக்கு 70 ஆண்டுகளும்; இந்தியாவுக்கு 75 ஆண்டுகளும் தேவைப்படும். வளரும் நாடுகள், வளர்ச்சி தடைபடாமல் இருக்க, மூன்று முக்கிய விஷயங்களை பின்பற்றுவது அவசியம். முதலீடு, புதிய தொழில்நுட்பங்களை உட்புகுத்துதல் மற்றும் கண்டுபிடிப்புகள்.

சிறந்த கண்டுபிடிப்பு:

இந்தியா போன்ற நாடுகள், புதிய தொழில்நுட்பங்களை இறக்குமதி செய்து, அதிக திறன் கொண்ட பணியாளர்களைக் கொண்டு, அதனை பரவலாக பயன்படுத்த வேண்டும். மேலும், பல புதிய நிறுவனங்களைக் கொண்டு, திறனற்ற பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களை மாற்ற வேண்டும். இந்த புதிய நிறுவனங்கள் ஒரு சில குழுமங்களை சேர்ந்ததாக மட்டுமே இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரை ஆதார் அடிப்படையிலான பொது டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் டாடா நிறுவனத்தின் யுக்தி சார்ந்த சில இறக்குமதி திட்டங்கள் அந்நாட்டின் சிறந்த கண்டுபிடிப்புகளாகும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Tetra
ஆக 03, 2024 22:11

உலக வங்கியா? அப்டீன்னா?


V GOPALAN
ஆக 03, 2024 19:19

First,world bank should check whether their 100 percenr loans are spent by states only for development. You are giving crores of rupees for proper drainage tem. Bur our corrupt tsmilnafu govt every five years demolishing drainage in the name of poor quality and again taking loan.


R.Varadarajan
ஆக 03, 2024 17:02

இப்போது நடப்பது கோணங்கி ஆட்சி இல்லை


K Veerappan
ஆக 03, 2024 12:35

We know how to frame our policies in order to become a developed country. Let our economy do not replicate the US economy.In spite of all the bottlenecks and hurdles, Indian economy is progressing, but slowly. This pace of development is enough.


Anbuselvan
ஆக 03, 2024 12:25

இந்தியா மற்றும் சீனா நாடுகளை மற்ற நாடுகளின் ஒப்பிட்டு ஒரு கருத்தை வெளியிட முடியாது. அவைகளின் தன்மையே வேறு. மற்ற நாடுகளுக்கு பொருந்தும் விதிகள் இங்கே பொருத்தி பார்க்க முடியாது. அவைகளின் கலவையே காம்போசிஷன் வேறு. உலகிலேயே தலை சிறந்த மத்திய வங்கியாக ரிசர்வ் பேங்க் இந்தியா இந்தியா இருந்து வருகிறது. பல மேற்கிந்திய நாடுகள் பொருளாதாரத்தில் தத்தளித்து கொண்டு இருக்கும் போது இந்தியா தலை நிமிர்ந்து நின்றது நிற்கின்றது.


Sivagiri
ஆக 03, 2024 12:17

இதெல்லாம் காங்கிரஸ் கம்பெனியின் - வெளிநாட்டு மேனேஜர்கள் - வேலை , . . ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் பார்முலா - - உதவுவது போல இருந்தாலும் வைக்கிறது ஆப்பு-ங்குறது முன்பு தெரியாமல் இருந்தது - இப்போ இங்க எல்லாம் உஷாரு . . .


வேங்கடசுப்பிரமணியன்
ஆக 03, 2024 12:12

அந்த நாடுகளில் தனி மனிதனின் கடன் மற்றும் வருவாய் சேமிப்பு இரண்டையும் உலக வங்கி ஒப்பிட்டு சொல்லச் சொல்லுங்கள்


Duruvesan
ஆக 03, 2024 12:09

நான் வெறும் சிவில் இன்ஜினியரிங் தான் படிச்சேன். எனக்கு எகனாமிக்ஸ் தெரியாது. எங்கிட்ட ஆட்சி குடு. 5 வருஷம் மாத்தி காட்டறேன். 1. இலவசம் இல்லை 2. லஞ்சம் வாங்கினால் மரண தண்டனை 3. கோட்டா இல்லை.௪.எல்லோரும் கட்டாயம் காலேஜ் வரை படிக்கணும், பிரீ 5. எல்லோரும் கட்டாயம் 2 வருஷம் மிலிட்டரி சர்வீஸ் 6. ஓட்டுக்கு காசு குடுப்பவன் வாங்குபவன் ஆயுள் தண்டனை. 7. Mla mp சம்பளம் 50000 8. மினிமம் டிகிரி இருந்தால் மட்டுமே mla ஆக முடியும். 9 நதி முழுதும் இணைப்பு. 10. போதை கஞ்சா விற்றால் மரண தண்டனை 11. மது தடை 12.எந்த போராட்டம் கிடையாது 13. Sunday மட்டுமே leave.


Kumar Kumzi
ஆக 03, 2024 11:32

ஐயா இந்த அறிவுரைகளை வீணாப்போன டாட் இந்தியா கம்பெனிக்கு சொல்லுங்கய்யா இலவசங்களை அள்ளி கொடுத்தே நாட்டை திவாலா ஆக்கிடுவானுங்கய்யா


அப்பாவி
ஆக 03, 2024 11:12

எங்கள் கொள்கைகளை ஏற்கவில்லை என்றால் உலக வங்கி காலி.


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ