உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தாலி கட்டிட்டா வேலை போயிடுமா? பாக்ஸ்கான் நிறுவனம் விளக்கம்

தாலி கட்டிட்டா வேலை போயிடுமா? பாக்ஸ்கான் நிறுவனம் விளக்கம்

புதுடில்லி: திருமணமான பெண்களை வேலைக்கு எடுப்பது இல்லை என்ற குற்றச்சாட்டிற்கு விளக்கம் அளித்துள்ள பாக்ஸ்கான் நிறுவனம், ‛‛ சமீபத்தில் வேலைக்கு எடுத்தவர்களில் 25 சதவீதம் பேர் திருமணம் ஆனவர்கள். பாதுகாப்பு கருதி, பாலினம் மற்றும் மதம் பார்க்காமல் அனைத்து பணியாளர்களும் தங்கம் உள்ளிட்ட எந்த உலோக பொருட்களையும் அணிவதை தவிர்க்க வேண்டும் என்ற விதி பின்பற்றப்படுகிறது '' எனக்கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ஆப்பிள் ஐபோன்களுக்கான உதிரிபாகங்கள் தயாரித்து கொடுக்கும் பாக்ஸ்கான் நிறுவனத்திற்கு ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆலை இயங்கி வருகிறது. இங்கு திருமணமான பெண்களை வேலைக்கு எடுப்பது இல்லை என புகார் எழுந்தது. இது குறித்து அறிக்கை அளிக்கும்படி, தமிழக தொழிலாளர் நலத்துறைக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.இந்நிலையில், பாக்ஸ்கான் நிறுவனம் அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. அந்த அறிக்கையில் உள்ளதாக வெளியான தகவலில் கூறப்பட்டு உள்ளதாவது: புதிதாக வேலைக்கு எடுக்கப்பட்டவர்களில் 25 சதவீதம் பேர் திருமணம் ஆனவர்கள். பாதுகாப்பு கருதி, பாலினம் மற்றும் மதம் பார்க்காமல் அனைத்து பணியாளர்களும் தங்கம் உள்ளிட்ட எந்த உலோக பொருட்களையும் அணிவதை தவிர்க்க வேண்டும் என்ற விதி பின்பற்றப்படுகிறது.திருமணம் ஆன பெண்களை வேலைக்கு எடுப்பது இல்லை என்ற நிபந்தனை எங்களின் கொள்கையே கிடையாது. வேலைக்கு தேர்வு ஆகாத சிலர் இது போன்ற குற்றச்சாட்டை கிளப்பி விட்டுள்ளனர். இது போன்ற பொய் குற்றச்சாட்டு நிறுவனத்தை பாதிக்கும். இவ்வாறு அந்த தகவலில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூன் 28, 2024 13:53

அடுத்த ஸ்டெரிலைட். வாழ்க தமிழகம். நாற்பதுக்கு நாற்பது நாளை நமதே மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள்.


K.aravindhan aravindhan
ஜூன் 28, 2024 09:57

பாக்ஸ்கான் இவர்களுக்கு உறுத்தலாகவே உள்ளது.ரொம்ப பொங்குவோர்க்கு


Shannmukam
ஜூன் 27, 2024 19:50

Not hiring married Indian women is an American practice. Excluding fields such as health, IT, and Education that have short supply, married Indian women are rejected in other fields. Accounting field has the worst record.


Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 27, 2024 21:35

any reason why?


Jagan (Proud Sangi)
ஜூன் 28, 2024 21:51

Not true. My nephews went there for studies and they work in BlackRock and Morgan Stanley.


Murthy
ஜூன் 27, 2024 19:13

தாலி அணிந்தால் வேலை இல்லை என்பதுபோல் உள்ளது......முட்டாள்தனமான ஒப்புக்கு பதில்தரும் செயல்.


Jagan (Proud Sangi)
ஜூன் 27, 2024 18:44

ஏன் எல்லாரும் சீனாவில் முதலீடு செய்கிறார்கள் என்று புரியுது. எல்லாத்துலயும் பிரச்னை தான் இந்தியாவில்


D.Ambujavalli
ஜூன் 27, 2024 16:36

இந்தக்காலத்தில் எத்தனை பெண்கள் தாலி அணிகிறார்கள் ? திருட்டு பயம் காரணமாக வீட்டில் கழற்றி வைத்து விட்டுத் த்தான் செல்கிறார்கள் வேறு ஏதாவது பிரசினைகள் கிளம்பி, நிர்வாகம் இவ்விதம் தடை செய்திருக்கலாமே


ஆரூர் ரங்
ஜூன் 27, 2024 15:49

விசேஷங்கள், பிரசவ லீவு, குழந்தை பராமரிப்பு என பல்வேறு காரணங்களுக்காக லீவு கேட்கிறார்கள் என்பதனால் பல தனியார் நிறுவனங்கள் திருமணமான பெண்களை வேலைக்கு வைக்கத் தயங்குகின்றன. இதை நேரடியாகவே கூறியிருக்கலாம்.


Srinivasan Krishnamoorthi
ஜூன் 27, 2024 15:41

1. உதிரி பாகம் தங்கம் அல்லது வெள்ளி பயன்படுத்த படுகிறது அதனால் உலோகம் அணிந்து வர தடை செய்துள்ளோம் மஞ்சள் கயிறு தாலி தடை செய்ய பட வில்லை என அறிக்கை கொடுக்க வில்லை போஸ்க்கோன். 2. தாலி அணிந்து வந்தவர்கள் தேர்வு செய்யப்பட வில்லை என சொல்லாமல், தேர்வாகத்தவர்கள் சிலர் கட்டு கதை என சொல்லி உள்ளது . அறிக்கை திமுக விவகாரிகள் அறிவுரைப்படி தான் கொடுக்கப்பட்டுள்ளது போல தெரிகிறது


சிந்தனை
ஜூன் 27, 2024 15:13

அதுசரி, முதலில் அலுவலகத்திலும் எங்கேயும் உலோகம் இல்லையா??


தத்வமசி
ஜூன் 27, 2024 15:12

உள்ளூரில் உள்ள சில அல்லக்கைகள் தங்கள் பேச்சை கேட்கவில்லை என்று இப்படி கதையை கட்டி விடுவார்கள். இப்படித்தான் தமிழகத்தில் இருந்து பெரிய மற்றும் சிறிய கம்பெனிகள் விரட்டி அடிக்கப் படுகின்றன. கோவை, ஈரோடு பகுதிகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக கம்பெனிகள் பல காரணங்களால் வெளி மாநிலங்களுக்கு வெளியேறுகின்றன. அல்லக்கைகளுக்கு எந்த நஷ்டமும் இல்லை இதனால். அதனால் அவர்கள் கவலைப் படப்போவது இல்லை. ஆனால் வேலை தேடிச் செல்லும் இளைஞ்சர்களின் வாழ்வு கேள்விக் குறியாக மாறிவிடும்.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி