உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இரண்டாம் உலகப்பேர் பாணியில் மீட்புப்பணி

இரண்டாம் உலகப்பேர் பாணியில் மீட்புப்பணி

பாணியில் மீட்புப்பணி

இரண்டாம் உலகப்போர் காலக்கட்டத்தில் சிக்கலான இடங்களை கடந்து வாகனங்கள், டாங்கிகள் செல்ல, 'பெய்லி' பால அமைப்பு பயன்படுத்தப்பட்டது. இந்த பால அமைப்பை வடிவமைத்து தந்தவர் டொனால்ட் பெய்லி. அதனால் அவர் பெயரில் இந்த பாலங்கள் அழைக்கப்படுகின்றன.நிலச்சரிவால் பிற பகுதிகளிடம் இருந்து துண்டிக்கப்பட்டுள்ள வயநாடு மாவட்டம், சூரல்மலை பகுதியில், ராணுவத்தினர் இந்த பெய்லி பாலத்தை தற்போது கட்டி வருகின்றனர். சூரல்மலையில் ஆற்றின் குறுக்கே 24 டன் எடை உடைய பாலம், அரை கி.மீ., நீளத்துக்கு அமைக்கும் பணி நடந்து வருகிறது.இதற்கு தேவையான இரும்பு தளவாடங்கள் டில்லி மற்றும் பெங்களூருவில் இருந்து கண்ணுார் விமான நிலையத்திற்கு விமானம் வாயிலாக கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து லாரிகளில் வயநாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பெய்லி பாலம் அமைக்கும் பணி இன்று மாலையுடன் முடியும் என, ராணுவத்தினர் தெரிவித்தனர். அதன்பின், இந்த பாலத்தின் வழியே மீட்புப்பணிக்கு தேவையான கனரக வாகனங்கள் செல்லும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Saravanakumar c
ஆக 01, 2024 08:26

இந்திய ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம்


N.Purushothaman
ஆக 01, 2024 06:42

இந்திய ராணுவத்தின் சேவை அளப்பரியது.. ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கங்கள் ...


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி