உள்ளூர் செய்திகள்

ஆதிச்சனுார் அகழாய்வு பணி பள்ளி மாணவியர் பார்வை

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த ஆதிச்சனுார் மற்றும் வசந்தகிருஷ்ணாபுரம் பகுதியில் நடைபெற்று வரும் அகழ்வாய்வு பணியை சித்தலிங்கமடம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர் பார்வையிட்டனர்.கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் உதியன் தலைமையில் மாணவியர்கள் 20 பேர் பார்வையிட்டனர்.ஆதிச்சனூர் மற்றும் வசந்தகிருஷ்ணாபுரம் அகழாய்வு திட்ட இயக்குநர் லோகநாதன், மாணவியர்களிடம் அப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் 9 கல்வட்டங்கள், ஈமப்பேழை, எலும்புகள், சங்கு வரிசைகளை காண்பித்து அதனுடைய காலம், பழங்கால மனிதர்களின் வாழ்வியல் முறைகள் குறித்து விவரித்தார். ஆசிரியர் கலா மாணவிகளை ஒருங்கிணைத்து சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்