பேராசிரியர் பணி: விசாரணை குழு அமைப்பு
இதன்படி அண்ணா பல்கலையில் பணியாற்றும் உதவி மற்றும் இணைப் பேராசிரியர்களுக்கு பணி மேம்பாடு தொடர்பாக நேர்முக தேர்வு நடத்தப்பட்டது. இதில் சில துறைகளின் உதவி மற்றும் இணைப் பேராசிரியர்கள் மதிப்பெண் குறைவாக பெற்றதால், தேர்வானோர் பட்டியலில் இடம் பெறவில்லை என கூறப்படுகிறது. அதே நேரம் பதவி உயர்வுக்கு தேர்வாகாதோர், தங்களுக்கு பணி மேம்பாட்டு திட்டத்தில் பதவி உயர்வு பெற தகுதி உள்ளதாகவும், நேர்முக தேர்வில் குளறுபடிகள் ஏற்பட்டு உள்ளதாகவும், பல்கலையின் துணைவேந்தர் மற்றும் உயர்கல்வி துறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர்.இதையடுத்து பணி மேம்பாட்டு நேர்முக தேர்வு சரியாக நடந்துள்ளதா என்பதை விசாரிக்க, உயர்கல்வி துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, உயர்கல்வி துறை கூடுதல் செயலர் பழனிசாமி, தொழில்நுட்ப கல்வி இயக்குனர் வினய், தொழில்நுட்ப கல்வி கூடுதல் இயக்குனர் ஜெயந்தி ஆகியோர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது.