உள்ளூர் செய்திகள்

118 மாணவர்களுக்கு பணி ஆணை வழங்கல்

தேனி: தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரியில் சென்னை அரக்கோணம் எம்.ஆர்.எப்., நிறுவனம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.இதில் இயந்திரவியல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்ப துறை, எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் துறை மாணவர்கள் பங்கேற்றனர். முகாமில் எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு நடந்தது. நிறுவன உதவி மேலாளர் யுவராஜ்குமார், லீட் சூப்பர்வைசர் நந்தகுமார் மாணவர்களை தேர்வு செய்தனர். நாடார் சரஸ்வதி கல்லுாரி, பிற கல்லுாரிகளில் இருந்து பங்கேற்றவர்களில் 118 மாணவர்கள் பங்கேற்றனர்.தேர்வான மாணவர்களுக்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின் முறை தலைவர் தர்மராஜன், துணைத்தலைவர் ஜீவகன், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் ராமச்சந்திரன், கல்லுாரி செயலாளர் சோமசுந்தரம், இணைச்செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் பணி ஆணை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்