உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பிரசாரத்துக்கு அழைப்பு இல்லை!

பிரசாரத்துக்கு அழைப்பு இல்லை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'இந்தியாவை காக்க எங்களுக்கு ஓட்டளியுங்கள்' என, தி.மு.க., தேர்தல் பிரசாரத்துடன் விளம்பரமும் செய்தது. ஆனால், தமிழகத்தை விட்டு தி.மு.க., தலைவர்கள் மற்ற மாநிலங்களில் பிரசாரம் செய்ய, 'இண்டியா' கூட்டணி தலைவர்கள் விரும்பவில்லை என்ற தகவல், தற்போது டில்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, த.மா.கா., தலைவர் ஜி.கே. வாசன் உட்பட, சில தமிழக பா.ஜ., கூட்டணி தலைவர்கள், வட மாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளனர். பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில், தமிழர்கள் அதிகம் உள்ளதால் அங்கு இவர்கள் பிரசாரம் செய்வர்.தமிழகத்தில் தேர்தல் முடிந்து விட்டது; ஜூன் 4ல் ஓட்டு எண்ணிக்கை. இந்நிலையில், தமிழக இண்டியா கூட்டணி தலைவர்கள், 'டில்லி பக்கமோ, வடமாநில பக்கமோ தயவு செய்து பிரசாரத்திற்கு வர வேண்டாம். ஜூன் 4 வரை தமிழகத்திலேயே இருக்கவும்' என, தி.மு.க., தலைமைக்கு தகவல் சொல்லப்பட்டதாம்.சனாதனம் குறித்து, தி.மு.க., தலைவர்கள் பேசியதை வடமாநிலத்தில், பா.ஜ., தேர்தல் பிரசாரத்தில் குறிப்பிட்டு வருகிறது. 'ராமரை எதிர்க்கும் கட்சி தி.மு.க., 'இண்டியா' கூட்டணியும், ராமருக்கு எதிரானது' என, பா.ஜ., தரப்பில் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.'இதனால், தி.மு.க., தலைவர்கள் தமிழகத்திலேயே இருப்பது தான் கூட்டணிக்கு நல்லது' என, காங்கிரசின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தி.மு.க., தலைமைக்கு சொல்லி விட்டாராம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

nizamudin
ஏப் 22, 2024 18:05

எதற்கு அழைக்கணும் பேசுவது புரியாது


Narayanan
ஏப் 22, 2024 12:22

நம் திராவிட கட்சிகளின் எல்லையானது கடலூர், கன்யாகுமாரியிலிருந்து சென்னை வரை என்பதை மிக தெளிவாகவே சொல்லி விட்டார்


rama adhavan
ஏப் 22, 2024 00:05

செல்லா காசுகளுக்கு எங்கு போனாலும் சைபர் மதிப்பு தான்


hari
ஏப் 21, 2024 17:43

கவலை வேண்டாம்... மும்பை கனோஜ் கூப்பிடுவாரு


பாரதி
ஏப் 21, 2024 16:35

கவலைப்படாதீங்க.... இன்னும் கொஞ்ச நாள்ல தமிழ்நாட்டிலயும் வேலை இருக்காது... ஓய்வு எடுக்கலாம். ...


N.Ramanathan
ஏப் 21, 2024 13:39

காரியம் ஆனதும் கழட்டிவிடும் காங்கிரஸ்.


kiran24
ஏப் 21, 2024 09:07

திமுகவினர் பேசியது மிகவும் மோசமான செயல். அதுவும் கட்சியின் மூத்த தலைவர் மகன் பேசியது தான்,....மிகவும் தவறான செயல். அனைத்து மத மக்களையும் சரி சமமாக பார்க்கும் தலைமை பண்புடன் இருக்க வேண்டும். ஆனால் அங்கே அது இல்லை.


Pappu
ஏப் 21, 2024 09:05

Shame shame puppy shame


Narayanan K
ஏப் 21, 2024 07:24

Haha Super good. Sanatana Effect. Vazhga Valarga..


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை