உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அடுத்த தேர்தலில் பலமான கூட்டணி: நிர்வாகிகளிடம் இ.பி.எஸ்., உறுதி

அடுத்த தேர்தலில் பலமான கூட்டணி: நிர்வாகிகளிடம் இ.பி.எஸ்., உறுதி

சென்னை: ''கட்சி நிர்வாகிகள் அடிக்கடி கூட்டம் நடத்தி, மக்களுடன் நெருக்கமாக வேண்டும். அடுத்த தேர்தலில் பலமான கூட்டணி அமைக்கப்படும்,'' என, இ.பி.எஸ்., தெரிவித்து உள்ளார்.லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவின. இதுவரை இல்லாத அளவுக்கு ஓட்டு சதவீதம் குறைந்தது.இதற்கான காரணங்களை ஆராய்வதற்காக, தொகுதி வாரியான ஆலோசனைக் கூட்டம் நேற்று துவங்கியது. கூட்டத்திற்கு வந்த நிர்வாகிகளின் மொபைல் போன்களை, கட்சி அலுவலகப் பணியாளர்கள் வாங்கி வைத்துக் கொண்டு, அவர்களை கூட்ட அரங்கிற்குள் அனுமதித்தனர்.பொதுச்செயலர் இ.பி.எஸ்.,, மாலை 4:00 மணிக்கு கட்சி அலுவலகம் வந்தார். அவர்களுக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். கட்சி அலுவலக வளாகத்தில் உள்ள, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார். பின் கூட்ட அரங்கிற்கு சென்றார். முதலில் காஞ்சிபுரம் லோக்சபா தொகுதி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. மாலை, 4:30 மணிக்கு துவங்கிய கூட்டம், 6:30 மணிக்கு நிறைவடைந்தது. அதன்பின் ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நடந்தது குறித்து, கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: காஞ்சிபுரம் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, ஆறு சட்டசபை தொகுதிகளின் நிர்வாகிகள், தொகுதிவாரியாக தனித்தனியே அமர வைக்கப்பட்டனர். ஒவ்வொரு தொகுதியிலும், பேச விரும்பும் நிர்வாகிகள் பேசலாம் என, பொதுச்செயலர் தெரிவித்தார். பெரும்பாலானோர் கட்சி தலைமையை புகழ்ந்து பேசினர்.சிலர் மட்டும், 'தற்போதைய கட்சி நிர்வாகிகள், பழைய நிர்வாகிகளை மதிப்பதில்லை. இதனால், அவர்கள் கட்சிப் பணியில் இருந்து ஒதுங்கி இருக்கின்றனர்' என்றனர்.சிலர், 'கூட்டணி பலமாக அமையவில்லை. தி.மு.க., தரப்பில் மகளிருக்கு, 1,000 ரூபாய் வழங்கியதை மையப்படுத்தி பிரசாரம் செய்தனர்' என்றனர். அதற்கு பதில் அளித்த பழனிசாமி, '1,000 ரூபாய் கொடுக்கச் சொன்னதே நாம்தான் என்பதை மக்களிடம் விளக்குங்கள். கட்சியில் மாவட்ட அளவில் ஒருங்கிணைப்புக் குழு அமைத்து செயல்படுங்கள்' என்றார்.ஒரு சிலர் முன்னாள் அமைச்சர் வளர்மதி மீது புகார் தெரிவிக்க, தனிப்பட்ட முறையில் புகார் தெரிவிக்க வேண்டாம் எனக் கூறப்பட்டது. இறுதியாக இ.பி.எஸ்., பேசினார். ஒன்றியம், நகரம், பேரூராட்சி அளவில், அடிக்கடி கூட்டம் நடத்துங்கள். மக்களுடன் அதிகம் தொடர்பு வைத்துக் கொள்ளுங்கள். அவர்களுடன் நெருங்கி பழகுங்கள். நம் ஆட்சியின் சாதனைகளை எடுத்துக் கூறுங்கள். அடுத்த முறை பலமான கூட்டணி அமைக்க ஏற்பாடு செய்யப்படும். காஞ்சிபுரம் தொகுதியில் பெரிய அளவில் நம் ஓட்டு சதவீதம் குறையவில்லை. எனவே, இப்போதிருந்தே தேர்தல் பணிகளை துவக்கினால், சட்டசபை தேர்தலில் வெற்றி பெறலாம். இளைஞர்கள், இளம்பெண்களை கட்சிப் பணியில் அதிகம் ஈடுபடுத்துங்கள். தகவல் தொழில்நுட்ப அணியில் உள்ளவர்கள், சமூக வலைதளங்களில் வேகமாக செயல்படுங்கள். தோல்வியை மறந்து உழைப்போம். வரும் தேர்தலில் ஆட்சி அமைப்போம் எனப் பேசினார். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

saravan
ஜூலை 11, 2024 17:31

திமுக வோடு கூட்டணி வைக்கப்போறீர்களா...பேசாமல் கட்சியை OPS இடம் கொடுங்கள் கட்சி நிலையாக இருக்கும்


ram
ஜூலை 11, 2024 16:20

பேசாமல் உங்கள் பங்காளி கட்சியுடன் கூட்டணி வையுங்கள்,


Kogulan
ஜூலை 11, 2024 15:23

அதிமுக பிழைக்கனும் என்றால் துரோகிகளை திறத்திவிட்டு உண்மை விசுவாசிகள் தலைமை ஏற்க முன்வர வேண்டும்


சுலைமான்
ஜூலை 11, 2024 13:43

EPS அவர்களே! இனி நீங்கள் விசிக காங்கிரஸ் மாதிரி கூட்டணியில் யாராவது சேர்த்துக் கொள்வார்களா என்று அலையும் நிலையில் உள்ளீர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்.


pmsamy
ஜூலை 11, 2024 11:37

அதிமுக தனிப்பெரும் கட்சி இல்லை என்பதை இபிஎஸ் சொல்கிறார்


Natchimuthu Chithiraisamy
ஜூலை 11, 2024 11:02

பழனிசாமி அவர்கள் மக்களிடம் மதிப்பு இழந்ததிக்கு காரணம் என்ன என்று அவருக்கு புரியவில்லை ஆனால் அணைத்து மக்களுக்கும் தெரியும் முஸ்லீம் ஓட்டுக்கள் திமுகவுக்கு உறுதி செய்துவிட்டது இனி முஸ்லீம் ஓட்டுக்கள் திரும்ப வராது என்று எனவே ஒரே வழி பிஜேபி தான். பலநாள் யோசித்தாலும் இது தான் உண்மை.


Senthil K
ஜூலை 11, 2024 20:21

தவறான கணிப்பு... தற்போது முஸ்லிம் ஓட்டு பெரும் பகுதி... நாம் தமிழர் கட்சிக்கு போய் உள்ளது....


vijay, covai
ஜூலை 11, 2024 22:17

super


subramanian
ஜூலை 11, 2024 10:27

சரியான தலைமை தேவை அதிமுக விற்கு


பேசும் தமிழன்
ஜூலை 11, 2024 08:34

பங்காளி கட்சி திமுகவுடன் இப்போது மறைமுக கூட்டணி.... அடுத்த தேர்தலில் நேரடியான..... பலமான கூட்டணி..... அப்படி தானே பத்து தோல்வி பழனிசாமி அவர்களே ???


karunamoorthi Karuna
ஜூலை 11, 2024 08:17

திமுகவுடன் அமைக்கும் கூட்டணி தான் பலமான மற்றும் பணப்பையை நிரப்பி கொள்ள முடியும்


ராமகிருஷ்ணன்
ஜூலை 11, 2024 07:10

கூட்டணி பேச திறமையற்ற நீங்கள் தேறுவது கடினம். திமுகவுடன் பணத்தை வாங்கிக் கொண்டு 2 முறை ஜெயிக்க வைத்ததாக பேச்சு உள்ளது.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை