உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்: காங்கிரசுக்கு எதிரான அதிரடி!

டில்லி உஷ்ஷ்ஷ்: காங்கிரசுக்கு எதிரான அதிரடி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'நாட்டின் அரசியலமைப்பை பா.ஜ., மாற்ற முயற்சிக்கிறது' என்கிற கோஷத்துடன், லோக்சபா தேர்தலில் போட்டியிட்டது, 'இண்டியா' கூட்டணி. பார்லிமென்டிலும் இது குறித்து ராகுல் உட்பட எதிர்க்கட்சி தலைவர்கள் பேசி வருகின்றனர்.இதை எதிர்கொள்ள, பா.ஜ.,விற்கு ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. முன்னாள் பிரதமர் இந்திரா கொண்டு வந்த எமர்ஜென்சி குறித்து, பா.ஜ.,வினர் எதிர்வாதம் வைத்தனர். உடனே ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கர், 'எமர்ஜென்சி காலத்தில் நடந்த அட்டூழியங்கள் குறித்து விசாரித்த, ஷா கமிஷனின் அறிக்கையை சபையில் சமர்ப்பிக்கலாமே' என, யோசனை கூறினார்.கடந்த, 1975ல் எமர்ஜென்சியைக் கொண்டு வந்தார் இந்திரா. தி.மு.க., தலைவர்கள் உட்பட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் சிறை சென்றனர்; பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்பட்டது.ஜனதா கட்சி, 1977ல் ஆட்சி அமைத்தவுடன், எமர்ஜென்சியின் போது நடந்த அராஜகங்களை ஆராய, முன்னாள் தலைமை நீதிபதி ஜெ.சி. ஷா தலைமையில் கமிஷனை அமைத்தது, மொரார்ஜி தலைமையிலான ஜனதாஅரசு.கடந்த, 1978ல் 500 பக்கங்களுக்கும் மேலான தன் அறிக்கையை சமர்ப்பித்தார் ஷா. போலீஸ் அராஜகம், எதிர்க்கட்சி தலைவர்கள் கைது, சஞ்சயின் அத்துமீறல்கள் என, பல விஷயங்கள் இந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருந்தன.இதை அமல்படுத்த, சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க ஜனதா அரசு முயற்சித்தது; ஆனால், உட்கட்சி பிரச்னையால் மொரார்ஜி ஆட்சி கவிழ்ந்தது. பின், 1980ல் மீண்டும் பிரதமரான இந்திரா, ஷா கமிஷன் அறிக்கையை குப்பையில் துாக்கி வீசினார்.இப்போது இந்த அறிக்கையை பார்லிமென்டில் தாக்கல் செய்ய, பா.ஜ., அரசு தயாராகி வருகிறது. இது முழுதும் வெளியானால், காங்., கூட்டணி கட்சிகளுக்கு தர்ம சங்கடம் ஏற்படும். காரணம், இந்த கூட்டணி கட்சி தலைவர்கள், இந்திராவால் சிறைக்கு அனுப்பப்பட்டனர்; அத்துடன், காங்கிரஸ் எப்படி நம் அரசியலமைப்பை நிலை குலைய வைத்தது என்பதும் தெரிய வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Swaminathan L
ஆக 06, 2024 11:04

இது இண்டி கூட்டணியின் இதர கட்சிகளுக்கு எந்த வகையிலும் சங்கடம், இடைஞ்சல் தராது. அவற்றுக்கு எமர்ஜென்சி வரலாறு மற்றும் அவை பெற்ற தாக்கங்கள் எல்லாம் மறந்து போய் இருக்குமா என்ன?


Ramaswamy
ஆக 05, 2024 14:16

During the time of independence war Congress was indirectly working against Hindus woth the help og Gandiji and Nehru. They brought most of the laws against Hindus. Nehru the then PM was totally against Hindus. Even now the Pariwaar following the same.


konanki
ஆக 05, 2024 07:23

99 சீட்டு வெற்றி க்ஷக்கே காங்கிரஸ் ஆணவத்துடன் ஆடும் ஆட்டம். மெஜாரிட்டி வந்தால் ஹிந்துக்கள் கடலில் உழுந்து சாக் வேண்டியது தான்.


kulandai kannan
ஆக 04, 2024 21:07

அப்படியே சர்க்காரியா கமிஷன் அறிக்கையும் தாக்கல் செய்யலாம்.


S S
ஆக 04, 2024 13:59

அந்த எமெர்ஜென்சியின் போதுதான் காங்கிரஸ் கல்வியை பொதுபட்டியலுக்கு மாற்றியது.அதை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்றுங்களேன். அதே போல் காங்கிரஸ் கொண்டு வந்த நீட் தேர்வு, ஜிஎஸ்டி, ஆதார் அட்டை அனைத்தையும் ரத்து செய்யுங்களேன்.


Sathyanarayanan Sathyasekaren
ஆக 04, 2024 21:47

ஸ் ஸ் நாடு முன்னேறுவது உங்களுக்கு பிடிக்காது போல, நீங்கள் சொன்னவற்றை ஏன் நீக்கவேண்டும் என்று ஒரு காரணம் சொல்லுங்க பார்ப்போம்? ஆதாரினால் எத்தனை மோசடிகள் பிடிபட்டு இருக்கின்றன? மூன்று நாட்களுக்கு முன் ஒரே பேராசிரியர் பல கல்லூரிகளில் சம்பளம் வாங்கி பிடிபட்டது ஆதார் நம்பர் மூலமாகத்தானே? ஆதார் இணைத்த பின் பல்லாயிரக்கணக்கான ரேஷன் அட்டைகள் போலி மற்றும் இரட்டை பிடிபட்டு. ஜிஸ்டி கு மாநில எல்லைகளில் சரக்கு வாகனங்கள் நாள் கணக்கில் லஞ்சம் கொடுக்க பத்து மைல் நீளத்திற்கு நிற்பது இல்லை. 6 மதத்திற்கு ஒருமுறை புத்தகங்களை தூக்கிக்கொண்டு வணிக வரி அலுவகத்திற்கு லஞ்சம் கொடுக்க சொல்லவேண்டியது இல்லை. இவையெல்லாம் உங்கள் கண்களுக்கு தெரியாதா? அல்லது இவற்றைலாம் செய்து முன்பு போல உங்களால் சம்பாதிக்க முடியவில்லை என்ற கோபமா?


Sridhar
ஆக 04, 2024 11:33

ஷா கமிஷன் அறிக்கையை சபையில் வெளியிடுமுன் காங்கிரஸ் காரர்களின் அனுமதி கோரவேண்டும். வெளியிடக்கூடாது என்கிறார்கள் என்றால், அதற்க்கு என்ன காரணம் என்று கேட்கவேண்டும். அது பொய் என்று கூறினால், அதை விவாதிக்கலாம். உண்மையாக இருக்கலாம் ஆனால், மிகப்பழைய விஷயம் அதை இப்போது ஏன் எடுக்கிறீர்கள் என்று வாதாடினால், அந்த உண்மைகளிலிருந்து உங்கள் கட்சி இப்போது எவ்வகையில் வேறுபடுகிறது என்பதை விளக்கச்சொல்லலாம். அப்போது காங்கிகள் இந்திராவுக்கு எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லவேண்டிய அவசியம் ஏற்படும். மேலும், 40 ஆண்டுகளுக்கு முன் நடந்த விஷயங்களையே புரட்டிப்பார்க்க தயங்கும் ஒரு ஆட்சி, பல நூறாண்டு காலங்களுக்கு முன் நடந்ததாக சொல்லப்படும் ஜாதிக்கொடுமைகள் பற்றிமட்டும் இன்று வரை விடாமல் பேசிகொண்டுருப்பது ஏன் என்ற கேள்வியும் எழவேண்டும். தீமுகாவும் கம்யூனிஸ்டுகளும் இதை எப்படி எதிர்ப்பார்கள் என்றும் பார்க்கவேண்டும். எப்படி பார்த்தாலும், ஷா கமிஷன் அறிக்கையை வெளிகொண்டுவருவது பல திடுக்கிடும் தகவல்களை இந்த தலைமுறை மக்களுக்கு தெரியப் படுத்துவதோடு, பல நல்ல திருப்பங்களுக்கு அடித்தளமாக அமையும்.


Neo Aryan
ஆக 04, 2024 11:45

ஆம். ஷா கமிசன் அறிக்கையை விரிவாக விவாதிக்க வேண்டும். வரவேற்போம்.


Mahendran Puru
ஆக 05, 2024 02:41

நல்ல நல்ல காமெடியான கருத்துக்கள் பகிரப்படுகிறது. வாஜ்பாய் அரசு 5 ஆண்டுகள் திமுக தயவில் தான் இயங்கியது என்பதை அறியாத பலர் கருத்து சொல்வது நல்ல நகைச்சுவை.


RAMAKRISHNAN NATESAN
ஆக 04, 2024 11:13

ஆமா ...... வேட்டி கட்டுன வெண்டைக்காய் செயிலுக்குப் போனது மிசா லையா ?


subramanian
ஆக 04, 2024 10:42

தாங்கள் செய்த ஊழல் மக்களுக்கு தெரிய கூடாது என்று இண்டி கூட்டணி கூச்சல் போட்டு நாடகம் ஆடுகிறார்கள்.


ஆரூர் ரங்
ஆக 04, 2024 09:37

அவசர நிலைக் காலத்தில் அநியாயமாக படுகொலை செய்யபட்ட, விசாரணையின்றி சிறையிலடைக்கப்பட்டு வாடிய அப்பாவிகள் மற்றும் வாழ்வாதாரம் இழந்த குடும்பங்களுக்கு எனது அனுதாபங்கள். அதே ராட்சச குடும்பத்துக்கு மீண்டும் வாக்களித்த முட்டாளகள் திருந்தட்டும்.


RAMAKRISHNAN NATESAN
ஆக 04, 2024 11:15

பாஜக தான் விட்டுக்கொடுத்தது..


ஆரூர் ரங்
ஆக 04, 2024 09:33

1980 இல் இந்திரா மீண்டும் பதவிக்கு வந்தவுடன் ஷா கமிஷன் அறிக்கையை எல்லா அரசு அலுவலகங்கள், நூலகங்கலிருந்தும் அகற்றினார். பின்னர் முன்னாள் திமுக எம்பி இரா செழியன் அதனை மீண்டும் வெளியிட்டார். ஒரே குடும்ப முடியாட்சி எதில் கொண்டு போய் விடும் என்பதை அந்த கமிஷனின் அறிக்கை நன்கு தெளிவுபடுத்திவிட்டது.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை