உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மனப்பக்குவம் இல்லாதவர் கவர்னர் :அமைச்சர் ரகுபதி விமர்சனம்

மனப்பக்குவம் இல்லாதவர் கவர்னர் :அமைச்சர் ரகுபதி விமர்சனம்

சென்னை :''தமிழகம் அனைத்து விதத்திலும் முதலிடத்தில் உள்ளதை, புள்ளி விபரத்தோடு சொல்வதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம், தாங்கிக்கொள்ளும் சக்தி கவர்னருக்கு இல்லை,'' என, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.அவர் அளித்த பேட்டி:ஜனநாயகத்தை மதிக்கும் முதல்வர், கவர்னரை முறைப்படி அழைத்து, சட்டசபை முதல் கூட்டத்தை கூட்டினார். கேரள கவர்னர் இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு இறங்கிச் சென்றார். தமிழக கவர்னர், தன் உரையிலிருந்து ஒரு வார்த்தை கூட பேசாமல், சொந்தமாக சில கருத்துக்களை கூறிவிட்டு அமர்ந்து விட்டார். தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்கிறார். முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படுவது மரபு என்பதை, கடந்த ஆண்டே சபாநாயகர் எடுத்துக் கூறியுள்ளார். தென் மாநில கவர்னர்களின் திருவிளையாடல்கள், அங்குள்ள அரசுக்கு எதிராக அமைந்துள்ளன. இதை, இந்திய மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நிச்சயமாக கவர்னரின் நடவடிக்கைகள், வட மாநிலங்களில், 'இண்டியா' கூட்டணிக்கு வலிமை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. அவர் ஜனநாயகத்தை கொச்சைப்படுத்தி உள்ளார். உரையில் சந்தேகம் இருந்தால் கேட்கலாம். உரை உண்மைக்கு மாறாக உள்ளது என்று கூறினால், விளக்கம் அளிக்க தயாராக உள்ளோம்.தமிழகம் அனைத்து விதத்திலும் முதலிடத்தில் உள்ளதை, புள்ளிவிபரத்தோடு சொல்வதை, ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம், தாங்கிக் கொள்ளும் சக்தி கவர்னருக்கு இல்லை.தேசிய அளவில் ஒட்டுமொத்த வளர்ச்சியில், தமிழகம் உயர்ந்துள்ளது. விளையாட்டுத் துறையில் ஐந்தாம் இடத்தில் இருந்து, இரண்டாம் இடத்திற்கு முன்னேறி உள்ளது. இதை ஏற்று படிக்க மனமில்லாமல், அரசின் சாதனைகளை வாசிக்க விருப்பம் இல்லாமல், பொய்யான கருத்தை கவர்னர் கூறியுள்ளார்.எந்த கருத்து வேறுபாடு இருந்தாலும், கவர்னர் பதவிக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என, முதல்வர் சொல்கிறார். இதன் காரணமாகவே இத்தனை நிகழ்வுகளையும் தாங்கிக் கொண்டிருக்கிறோம். தேசிய கீதத்தை வாசிக்க வேண்டும் என்று கூறும் கவர்னர், சபாநாயகர் உரையை படிக்கும் வரை பொறுமையோடு இருந்தார்; இன்னும் இரண்டு நிமிடங்கள் இருந்திருக்கலாம். தேசிய கீதம் இசைக்கப்பட்ட பின், மரியாதையோடு சென்றிருக்கலாம்.மத்திய அரசுக்கு எதிரான கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களை, கவர்னர்கள் குறிவைத்து அசிங்கப்படுத்த முயற்சிக்கின்றனர். எங்களை அசிங்கப்படுத்த நினைப்பவர்களை, மக்கள் அசிங்கப்படுத்துவர்.நாங்கள் சுமுகமான சூழ்நிலையை உருவாக்க நினைத்தோம். கவர்னர் ரிமோட் கட்டுப்பாட்டில் உள்ளார். அவர் சுயேச்சையாக இயங்க முடியாது. கவர்னர் உரையில், இரண்டு, மூன்று இடங்களில் தான் முதல்வர் பெயர் இருந்தது. நாங்கள் செய்யும் சாதனைகள் மக்களை சென்றடைய வேண்டும் என்பதால், அதற்கு முக்கியத்துவம் அளித்து உரை தயாரிக்கப்பட்டது.இந்த அறிக்கையை வாசிக்க, கவர்னருக்கு மனமில்லை. நாங்கள் மரியாதையோடு அழைத்தோம். அவர் மரியாதையோடு நடந்து கொள்ளவில்லை. கவர்னருடன் அனுசரித்து செல்லவே விரும்புகிறோம்.கவர்னர் குறித்து பழனிசாமியால் விமர்சனம் செய்ய முடியாது. ஏதேனும் கூறினால், 'ரெய்டு' வந்து விடும். பா.ஜ., குறித்து, கவர்னர் குறித்து எதுவும் கூற மாட்டார்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

kuppusamy India
பிப் 13, 2024 21:13

மன நிலை சரியில்லாத அமைச்சர்கள்


sridhar
பிப் 13, 2024 18:46

DMK is a lunatic asylum


K.Ramakrishnan
பிப் 13, 2024 18:40

மன நிலை எப்படி?


Dharmavaan
பிப் 13, 2024 18:27

இந்த அநாகரீக கூட்டம் மாநிலத்தின் முதல் குடிமகனை விமர்சிப்பது தண்டிக்கப்பட வேண்டும்


konanki
பிப் 13, 2024 16:27

ரௌடி கட்சி எல்லாம் எதை பத்தி பேசுது


A1Suresh
பிப் 13, 2024 16:08

நான் வடமொழியில் ஏம்.ஏ தேறியவன். பக்குவம் என்பது நெருப்பினால் சுட்டு செய்யும் உணவு பதார்தங்கள் மட்டுமே சமமந்தம் உண்டு. எனவே மனப்பக்குவம் என்பது ஆகாயத்தாமரை, ஆமைப்பால், முயல்கொம்பு, குதிரைமுட்டை, கடவுள் இல்லை என்று பாமரர்கள் இருவேறு சொற்களை இணைத்து பேசும் பிதற்றல் தான். பத்தாம் வகுப்பு கூட படிக்காதவர்கள் நாட்டில் பண்டிதனாக நினைத்துக் கொள்கின்றனர்.


Narayanan
பிப் 13, 2024 15:27

என்னதான் இருந்தாலும் உங்களின் மனப்பக்குவம் ரவி சாருக்கு இல்லைதான் . நீங்களெல்லாம் பழுத்த அரசியவாதி . ரவி ஒரு நேர்மையான அதிகாரியாக இருந்தவர் . அவருக்கு இருக்கும் உயர்ந்த குணம் உங்களிடம் எதிர்பார்க்கக்கூடாது


theruvasagan
பிப் 13, 2024 15:21

கவர்னர் என்ன இவங்க எடுபிடியா. அவர் மத்திய அரசாங்கத்தின் பிரதிநிதி. இவங்க தங்களை தாங்களே புகழ்ந்து எழுதித் தந்ததை படித்து துதிபாடி பிழைப்பை ஓட்ட வேண்டுமென்று எதிர்பார்ப்பது நடக்கமுடியாத விஷயம்.


Bhakt
பிப் 13, 2024 13:42

அறிவே இல்லாதவர்கள் அறிவாலய வாசிகள்


Paraman
பிப் 13, 2024 14:55

அதனால் தான் அது "அறிவில்லா- லாயம்" என்று அன்போடு உண்மையான சுயமரியாதை இருக்கும் தமிழக மக்களால் அழைக்கப்படுகிறது.


A1Suresh
பிப் 13, 2024 16:12

லயம், ப்ரலயம் என்னும் சொற்களுக்கு அழிவு, பேரழிவு என்று பொருள் . அதுபோல அறிவாலயம் என்பது அறிவை அழிந்து போகும் இடம் என்றும் அன்மொழித்தொகை சொல்லாக கூற இயலும். நடைமுறையில் இது வெகு பொருத்தமானதாக இருக்கிறது. திமுககாரர்கள் தமது சுயமரியாதையை இழந்து, பகுத்தறிவும் இழந்து கருணாநிதி குடும்பத்தினரிடம் கையேந்தும் இடமாகும்.


duruvasar
பிப் 13, 2024 11:42

கோவணம் கட்டாத ஊரில் கோவணம் கட்டுபவன் பைத்தியக்காரனாக பார்க்கப்படுவது ஒன்றும் புதியதல்ல. அதுவும் இது பகுத்தறிவு மண் கேட்கவேண்டுமா ?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை