உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மூத்த குடிமக்கள் குடியிருப்புகள் திடீர் அதிகரிப்பு !

மூத்த குடிமக்கள் குடியிருப்புகள் திடீர் அதிகரிப்பு !

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை, கோவை, கும்பகோணம் உள்ளிட்ட நகரங்களில், மூத்த குடிமக்களுக்காக பிரத்யேக குடியிருப்புகள் கட்டுவது அதிகரித்துள்ளது. இதற்கென தனியாக விதிகள் வகுப்பது குறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை ஆய்வு செய்து வருகிறது.தமிழகத்தில், அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்கள் வெகுவாக அதிகரித்துள்ளன. மக்களின் வருவாய் நிலைக்கு ஏற்ப, கூடுதல் வசதிகளுடன் இக்குடியிருப்புகள் கட்டப்படுகின்றன.இதுபோன்ற குடியிருப்பு திட்டங்களில் வீடு வாங்க, மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதை புரிந்து கொண்ட கட்டுமான நிறுவனங்கள், இவற்றில் புதிய வழிமுறைகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. சென்னை உள்ளிட்ட நகரங்களில், அடுக்குமாடி திட்டங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளை வாங்கும் மக்கள், அதை வாடகைக்கு விடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும், பொதுவான பிரிவில் கட்டப்படும் அடுக்குமாடி திட்டங்களில், தனியாக வசிக்கும் மூத்த குடிமக்கள் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கின்றனர். இந்நிலையில், இதற்கு தீர்வாக, மூத்த குடிமக்கள் மட்டும் வசிக்கும் வகையிலான அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்கள் உருவாக துவங்கி உள்ளன. மக்களின் ஆர்வம் காரணமாக கட்டுமான நிறுவனங்கள் இது போன்ற குடியிருப்புகள் கட்டுவதை அதிரித்துள்ளன.

கும்பகோணம்

இதுகுறித்து கட்டட அமைப்பியல் பொறியாளர் பி.பாலமுருகன் கூறியதாவது: சென்னை மட்டுமல்லாது, கோவை, கும்பகோணம் உள்ளிட்ட நகரங்களிலும், மூத்த குடிமக்களுக்கான அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. மகன், மகள்கள் வெளிநாடுகளில் குடியேறிய நிலையில், தனியே வசிக்கும் மூத்த குடிமக்களுக்கான பாதுகாப்பான இருப்பிடமாக இந்த குடியிருப்புகள் அமைந்துள்ளன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டும், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் முழுமையாக மூத்த குடிமக்கள் பயன்பாட்டுக்கு மாற்றப்பட்டு உள்ளன. இதே போன்று கோவை, கும்பகோணம் நகரங்களிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கோவை, கும்பகோணம் பகுதிகளில், வில்லா வகையில் தனி வீடுகள் கட்டி விற்பனை செய்யப்படுகின்றன. சென்னையில் இவ்வகை வீடுகள் விற்பனை மட்டுமல்லாது, வாடகைக்கும் வழங்கப்படுகின்றன.

கூடுதல் வசதி

பொதுவாக அடுக்குமாடி திட்டங்களை செயல்படுத் தும் போது, குறைந்த வருவாய் பிரிவினருக்கான குறைந்த பரப்பளவு வீடுகளை குறிப்பிட்ட எண்ணிக்கையில் கட்ட வேண்டும். இந்த நிபந்தனையை பூர்த்தி செய்ய, மூத்த குடிமக்களுக்கான வீடுகளை குறைந்த பரப்பளவில் கட்டுவதில், கட்டுமான நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. அரசின் நிபந்தனையை பூர்த்தி செய்தது போன்று இருந்தாலும், வருவாயும் குறையாமல் கிடைத்து விடுகிறது. இந்த வளாகங்களில் உணவகம், மருத்துவ வசதி, ஆன்மிக சுற்றுலா ஏற்பாடுகள் கூடுதல் வசதியாக செய்யப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

'வசதிகள் இடம் பெற வேண்டும்'

இது குறித்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: மூத்த குடிமக்களுக்கான குடியிருப்புகள் கட்டி விற்பதில், எந்த கட்டுப்பாடும் இல்லை. இது போன்ற குறிப்பிட்ட நோக்கத்தில் கட்டி பராமரிக்கும் குடியிப்புகளில் வசிப்போர் குறித்த விபரங்களை, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் அளிக்க வேண்டும்.அந்த குடியிருப்பில் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்த வேண்டும். இதில், சம்பந்தப்பட்ட பிற துறைகளுடன் கலந்து பேசி, தேவையான புதிய விதிமுறைகளை வகுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

duruvasar
மார் 17, 2024 15:51

இதில் விசேடம் என்னவென்றால் மூத்தகுடியினருக்கு கட்டப்படும் இக்குடியிருப்புகளை கட்டும் கட்டுமான நிறுவனங்கள் பெரும்பாலும் மூத்த அரசியல்வியாதிகளின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதாம்.


ஆரூர் ரங்
மார் 17, 2024 12:31

வேலை கிடைத்தபின்னர், வேலைக்கு போகும் பெண்ணை மணந்து குழந்தை பெற்று செட்டிலாகி விடுவதற்கு முன் பெற்றோர் தள்ளாத முதுமையை அடைந்து விடுகிறார்கள். ஆபீஸில் ஒரு நாளைக்கு 14 மணிநேரம் கசக்கிப் பிழிந்து வேலை வாங்கும் நேரத்தில் முதியவர்களை வீட்டில் வைத்து கவனிப்பது எப்படி எனத் தெரியவில்லை. அவர்களும் தங்குவதற்கு வசதியாக பட்டினத்தில் மூன்று படுக்கையறை ஃபிளாட் தேடினால் 40000 க்குக் குறைவாக கிடைப்பதில்லை . பிள்ளைகள் தமக்கும் தனி அறை கேட்கிறார்கள். என்ன செய்ய?. முதியோர் இல்லங்களில் சேர்க்க முயற்சித்தாலும் உறவினர்கள் சுற்றம் சூழ வந்து திட்டுகிறார்கள்.????‍???? கடவுளே.


சுகி
மார் 17, 2024 23:55

In USA seniors living community buildings are common. The reason is same as you mentioned


GoK
மார் 17, 2024 10:18

மூத்த குடியிருப்புகள், வயதான மக்களின் தேவைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு அவற்றையொத்த கட்டுமான அமைப்புகளுடன் வருவது வரவேற்கத்தக்க ஒன்று. ஆனால் அவற்றை ஆக்கம் செய்வோர், நிர்வாகம் செய்வோர் இவர்களை அரசு முறைப்படுத்த சட்டம் கோட்பாடுகளை கொணர்தல், அவற்றை தணிக்கை செய்தல் இவை அரசுகளின் கடமை. இல்லையென்றால் வயது முதிர்ந்தவர்கள் பெரும் சங்கடத்தில் ஆழ்த்தப்படுவர் என்பது நிச்சயம்.


sridhar
மார் 17, 2024 15:15

குறிப்பாக கருணை இல்லங்கள் என்ற பெயரில் அனாதை இல்லம், முதியோர் இல்லம் எல்லாம் நடத்துவாங்க. நோக்கம் வேறு.


GMM
மார் 17, 2024 09:47

திராவிடம் வளரும் முன் மூத்த குடிமக்களின் தனிமை, ஆயிரத்தில் ஒன்று. சட்டம், வழக்கு மூலம் தந்தை, மகன்/சகோதர-சகோதரிகள் உறவை பிரித்தது. சில சமூக மக்கள் மட்டும் மறுமணம் புரிவது இல்லை. அவர்கள் இந்து மத ஆணிவேர். அதனை அழிக்க, விதவை மறுமணம் திட்டம், கலப்பு திருமணம் திட்டம் வகுத்தது. குடும்பம் சிதைந்தது. இந்து சமூகம், பெற்றோர்கள் பிள்ளைகள் உறவை இறுதி வரை இணைத்தது. பெற்றோர்கள் இறந்த பின் தான் சொத்து உரிமை. அனைத்து நல்லது கெட்டதில் பெற்றோர்கள் பங்கு உண்டு. இது கூட்டு குடும்பம் நிலைக்க உதவியது. திராவிடம் மறைந்தால் முதியவர்கள் இல்லமும் மறையும். சில ஆண்டுகள் வாழ்க்கைக்கு நடுத்தர, ஏழை மக்களுக்கு தனி குடியிருப்பு எதற்கு வேண்டும்?


sri
மார் 17, 2024 17:57

ஆம்.இந்த நிலை மாற சமுதாயத்தில் பழையகாலபடி மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே சாத்தியம்


முதியவன்
மார் 17, 2024 09:42

மூத்த குடிமக்களுக்குத்தான் பென்சன் வருது. காசும் இருக்கு. உடனடியா திட்டம் போட்டு உருவ வாணாமா? ஒன்றிய அரசே ரயில் கட்டண சலுகையை ரத்து செய்து உருவி வழிகாட்டுது. சீக்கிரம். போய்ச்சேர்ந்தால் அரசுக்கு 5 லட்சம்.கோடி மிச்சமாகுமாம்.


raja
மார் 17, 2024 09:14

இதில் கூட தமிழர்களின் கூட்டு குடும்ப கலாச்சாரத்தை அழித்த இந்தியாவிலேயே நம்பர் ஒன்னு திருட்டு திராவிட ஒன்கொள் டிரக் மாஃபியா குடும்ப ...


Ramesh Sargam
மார் 17, 2024 08:08

மகன், மகள்கள் வெளிநாடுகளில் குடியேறிய நிலை மற்றும் பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள் வசிக்க ஏற்றவாறு மூத்த மக்கள் (முதியோர்கள்) குடியிருப்பு இருக்கவேண்டும்.


chennai sivakumar
மார் 17, 2024 07:53

மூத்த குடியிருப்புகளை அவர்களது பிற்காலத்தில் விற்பனை செய்வது மிக கடினமானசெயல். நஷ்டத்திற்கு மட்டுமே போகிறது. மேலும் குடியிருப்புகளை வாங்கியபின் மாற்றங்கள் செய்வது கடினம். வீட்டு வாடகை advance போல சில குடியிருப்புகள் ஒரு lumpsum deposit vaangi கொண்டு பின்னர் அதை திருப்பி தந்து விடுகின்றனர். மூத்த குடிமக்களுக்கு இதுதான் சரி.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை