மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
12 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
12 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
13 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
13 hour(s) ago
அரியாங்குப்பம்: நோணாங்குப்பம் படகு குழாமில் தொடர் விடுமுறையில், 34 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்தது.வெளி மாநில சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருவது நோணாங்குப்பம் படகு குழாம். பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை படகு சவாரி செய்யவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். வார விடுமுறையான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் படகு குழாமில் கூட்டம் அலை மோதும்.இந்நிலையில், கடந்த 15 மற்றும் 16ம் தேதி சுதந்திர தினம், சனி மற்றும் ஞாயிறு என தொடந்து 4 நாட்கள் விடுமுறையால், வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் படகு குழாமில் குவிந்தனர். போதிய படகு இல்லாததால், சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து சவாரி செய்தனர்.நோணாங்குப்பம் படகு குழாமிற்கு வந்த சுற்றுலா பயணிகள் வந்த வாகனங்களால் அப்பகுதியில் காலை முதல் மாலை வரை போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. கடந்த 4 நாட்களில், படகு குழாமிற்கு 34 லட்சம் வருவாய் கிடைத்தது.
12 hour(s) ago
12 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago