உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாராயக்கடை ஊழியரை தாக்கிய 4 பேர் கைது

சாராயக்கடை ஊழியரை தாக்கிய 4 பேர் கைது

அரியாங்குப்பம்: சாராயக்கடை ஊழியரை தாக்கிய 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். முருங்கப்பாக்கம் நடுத்தெருவை சேர்ந்த சேகர், 57; புதுச்சேரியில் உள்ள சாராயக்கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டு வாசலில் 4 வாலிபர்கள் தகராறு செய்து கொண்டிருந்தனர். வீட்டில் இருந்த சேகர் அவர்களை தட்டிக்கேட்டார். ஆத்திரமடைந்த உருளையன்பேட்டை சேர்ந்த நரேஷ், உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து சேகர், அவரது மனைவி, மகன் ஆகியோரை தாக்கி விட்டு தப்பியோடினர். சேகர் கொடுத்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, உருளையன்பேட்டை நரேஷ், 19; மணிகண்டன், 22; வேல்முருகன், 19; திருவள்ளுவர் சாலை விஜய், 19, ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ