உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உதவி தேர்தல் அதிகாரிகள் நியமனம்

உதவி தேர்தல் அதிகாரிகள் நியமனம்

புதுச்சேரி : புதுச்சேரியில் ஓட்டு எண்ணிக்கைக்கு 4 உதவி தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்னர். லோக்சபா தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி துவங்கி 7 கட்டமாக நடக்கிறது. புதுச்சேரி, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் முதல்கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 19 ம் தேதி நடந்தது. ஓட்டு எண்ணிக்கை வரும் ஜூன் 4ம் தேதி நடக்கிறது. இதற்காக புதுச்சேரியில் தேர்தல் அதிகாரி குலோத்துங்கனுக்கு உதவியாக சுற்றுலாத்துறை இயக்குனர், உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குனர், தகவல் தொழில்நுட்ப இயக்குனர், காரைக்கால் கோவில் செயல் அலுவலர் என நான்கு உதவி தேர்தல் அதிகாரிகளை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை