மேலும் செய்திகள்
திருக்குறள் கூறும் நிகழ்ச்சி
18 minutes ago
அமைச்சர்களுக்கு வேலை கேட்டு போராட்டம்
19 minutes ago
நுாலகம் கட்டும் பணி அமைச்சர் துவக்கி வைப்பு
19 minutes ago
போத்தீஸ் துணிக்கடையில் தானியங்கி கார் பார்கிங் வசதி
6 hour(s) ago
அரியாங்குப்பம்: கடலுார் சாலையில் பேனர் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சப் கலெக்டர் போலீசில் புகார் அளித்தார்.புதுச்சேரியில் பகுதியில் அரசியல் உள்ளிட்ட பேனர்கள் வைக்கப்பட்டு வருவதால், வாகன விபத்து, போக்குவரத்து இடையூறுகள் ஏற்பட்டு வருகிறது. நகரப்பகுதியில் முக்கிய இடங்களில் வைக்கப்படும் பேனர்களை நகராட்சியினர் அகற்றி வந்தாலும், பேனர்கள் வைக்கும் கலாசாரம் அதிகரித்து வருகிறது.இந்நிலையில், கடலுார் சாலை மரப்பாலம் முதல் நைனார்மண்டபம் வரை அரசியல் கட்சி பேனர்கள் வைக்கப்பட்டு வருகிறது. இதனால், போக்குவரத்து இடையூறுகள் ஏற்பட்டு வருகிறது. அதையடுத்து, நைனார்மண்டபம் பகுதியில் பேன்கள் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சப் கலெக்டர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் நேற்று முதலியார்பேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து, பேனர் வைத்தவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
18 minutes ago
19 minutes ago
19 minutes ago
6 hour(s) ago