உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தி.மு.க இளைஞர் அணி கால்பந்து போட்டி: வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு

தி.மு.க இளைஞர் அணி கால்பந்து போட்டி: வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு

புதுச்சேரி : புதுச்சேரியில், தி.மு.க., இளைஞர் அணி சார்பில் நடந்த கால்பந்து போட்டியில், வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. புதுச்சேரி மாநில தி.மு.க இளைஞர் அணி சார்பில், கருணாநிதி நுாற்றாண்டு விழா, ஐவர் கால்பந்து விளையாட்டு போட்டி, உப்பளம், இந்திராகாந்தி விளையாட்டு அரங்கில் நேற்று முன்தினம் துவங்கியது. மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் நித்திஷ் ஏற்பாட்டில் நடந்த போட்டியில், புதுச்சேரி, கேரளா, தமிழகத்தின் சென்னை, தின்டிவனம், கடலூர், எண்டியூர், கோவளம், சேலம் உள்ளிட்ட இடங்களில் இருந்து, மொத்தம், 52 அணிகள் பங்கேற்றன. இதில் முதல் இடத்தை கோரிமேடு பிளே மேக்கர்ஸ் அணியும், தி.மு.க., அணி இரண்டாம் இடத்தையும், பிளே மேக்கர்ஸ்-3 ம் அணி மூன்றாம் இடத்தையும் பிடித்தது.கால்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா, நேற்று மாலை 7.00 மணிக்கு நடந்தது. விழாவிற்கு, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமை தாங்கினார்.மாநில அவைத்தலைவர் சிவக்குமார், எம்.எல்.ஏ.,க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி வரவேற்றார். இந்த விழாவில், தமிழக தி.மு.க., கொள்கைப் பரப்புச் செயலாளர் சபாபதிமோகன் கலந்து கொண்டு முதல் இடத்தை பிடித்த அணிக்கு ரூ. 25 ஆயிரம், இரண்டாம் இடம் பிடித்த அணிக்கு ரூ. 15 ஆயிரம், மூன்றாமிடம் பிடித்த அணிக்கு ரூ. 10 ஆயிரம் மற்றும் கேடயம், சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.இந்த போட்டியை மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் தாமரைக்கண்ணன், ரெமிஎட்வின், தமிழ்ப்பிரியன், உத்தரம், பஜிலுதீன், மாநில அயலக அணி துணை அமைப்பாளர் சிவா, உப்பளம் தொகுதி துணைச் செயலாளர் ஆரோக்கியராஜ், நிர்வாகிகள் ராஜா, ராஜி, ரமேஷ், கல்யாணசுந்தரம், சுரேஷ் ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்