உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / டிரைவர் தற்கொலை: போலீஸ் விசாரணை

டிரைவர் தற்கொலை: போலீஸ் விசாரணை

திருக்கனுார்: திருக்கனுார் அடுத்த வாதானுார் ராஜஸ்ரீ லட்சுமி நகரைச் சேர்ந்தவர் மணிமாறன், 30; தனியார் பஸ் டிரைவர். இவரது மனைவி வெண்ணிலா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.மணிமாறன் நேற்று முன்தினம் மாலை குடும்ப பிரச்னை காரணமாக, வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.டாக்டர் பரிசோதித்து அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து வெண்ணிலா அளித்த புகாரின் பேரில், திருக்கனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை