அரியாங்குப்பம்: பலத்த இடி மற்றும் காற்றுடன் பெய்த கன மழையில் மின் கம்பிகள் செல்லும் ஒயர்களில் மீது மரங்கள் விழுந்ததால் தவளக்குப்பம் பகுதியில் 24 மணி நேரமும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.புதுச்சேரி பகுதியில், நேற்று முன்தினம் இரவு பலத்த இடி மின்னல் மற்றும் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. காற்றில் அரியாங்குப்பம், தவளக்குப்பம் பகுதியில் இருந்த மரங்கள் வேறோடு சாய்ந்தன.தவளக்குப்பம், அபிேஷகப்பாக்கம், நல்லவாடு, டி.என்., பாளையம், பூரணாங்குப்பம் உள்ள பல பகுதிகளில் மின்சாரம் செல்லும் மின் கம்பிகள் மீது மரங்கள் விழுந்தன. அதனால், மின் கம்பிகள் அறுந்து சேதமடைந்தன.அதையடுத்து, தவளக்குப்பம் மின்துறை இளநிலை பொறியாளர் திருமுருகன் மற்றும் ஊழியர்கள் அப்பகுதியில் மின் கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுப்பட்டனர். இதனால், தவளக்குப்பம் பகுதியில் 24 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் மக்கள், அவதிப்பட்டனர்.சபாநாயகர் செல்வம் பார்வையிட்டார். தவளக்குப்பம் போலீஸ் நிலையத்தில், மரங்கள் அடியோடி சாய்ந்து கீழே விழுந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதையடுத்து, சபாநாயகர் செல்வம், முயற்சியில், ஜே.சி.பி., இயந்திரம் மூலம், அப்பகுதியில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் , மின் துறை, கொம்யூன், பஞ்சாயத்து, பொதுப்பணித்துறை ஊழியர்கள் ஈடுப்பட்டனர்.