உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சட்டக்கல்லுாரி மாணவர்கள் இ.சி.ஆரில் சாலை மறியல்

சட்டக்கல்லுாரி மாணவர்கள் இ.சி.ஆரில் சாலை மறியல்

புதுச்சேரி: கோல்கட்டா மருத்துவமனை வளாகத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்து, பெரியக்காலாப்பட்டில் உள்ள அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரி மாணவர்கள் நேற்று காலை 10:30 மணிக்கு வகுப்புகளை புறக்கணித்தனர். தொடர்ந்து, பேரணி யாக புறப்பட்ட மாணவர்கள் 11:00 மணியளவில் பெரியக்காலாப்பட்டு-மாத்துார் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். காலாப்பட்டு போலீசார் மாணவர்களை சமாதானப்படுத்தி மறியலை கைவிட செய்தனர். இந்த போராட்டத்தால் 12:00 மணி வரையில், 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ