உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி எல்லைப் பகுதியில் மதுபாட்டில்கள் பறிமுதல்

புதுச்சேரி எல்லைப் பகுதியில் மதுபாட்டில்கள் பறிமுதல்

பாகூர்: தமிழக பகுதிக்கு கடத்த முயன்ற மதுபாட்டில்களை, கிருமாம்பாக்கம் போலீசார் பறிமுதல் செய்து கலால் துறையில் ஒப்படைத்தனர்.தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில்,வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள், மது பாட்டில்களை வழங்குவதை தடுக்கும் வகையில், போலீசார் மற்றும் தேர்தல் துறையினர் பறக்கும் படைகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.இந்நிலையில், கிருமாம்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு உச்சிமேடு எல்லை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, வாலிபர் ஒருவர் போலீசாரை கண்டதும், அவர் வைத்திருந்த பையை கீழே போட்டு விட்டு தப்பி சென்றார். போலீசார் அந்தப் பையை சோதனை செய்த போது அதில், 90 எம்.எல்., அளவுள்ள 200 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து, கலால் துறையிடம் ஒப்படைத்து, மதுகடத்தலில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை