உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நகை கடையில் நுாதன மோசடி

நகை கடையில் நுாதன மோசடி

அரியாங்குப்பம்: தவளக்குப்பத்தில் நகை வாங்கி கொண்டு ஜிபே மூலம் பணம் அனுப்பியதாக ஏமாற்றி சென்றவரை போலீசார் தேடிவருகின்றனர். தவளக்குப்பம் நான்குமுனை சந்திப்பு பகுதியில் நகைக்கடை நடத்தி வருபவர் சிம்னாரம்;42; இவரது கடைக்கு கடந்த 7ம் தேதி 35வயது மதிப்புள்ள டிப் டாப் ஆசாமி ஒருவர் வந்தார். 1 சவரன் தங்க நகை வாங்கினார். அதற்கான பணத்தை வேறு ஒரு நபர் மூலம் ஜிபே அனுப்பியுள்ளதாக தவறான குறுச்செய்தியை கடைகாரரிடம் காட்டி நகையை வாங்கிச் சென்றார். .பின்னர் கடை உரிமையாளர், தனது மொபைல் ஜி.பே.,வில் பார்த்த போது, பணம் வராமல் இருந்துள்ளது. இதுகுறித்து, நகைக்கடை உரிமையாளர் புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் நுாதன முறையில் மோசடியில் ஈடுபட்ட ஆசாமியை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை