உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மனைவியை தாக்கிய கணவருக்கு வலை

மனைவியை தாக்கிய கணவருக்கு வலை

அரியாங்குப்பம் : மனைவியை தாக்கிய கணவரை போலீசார் தேடிவருகின்றனர்.புதுச்சேரி புவன்கரே வீதி, உழந்தை கீரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் தினமும் மது குடித்துவிட்டு வருவதை அவரது மனைவி ஸ்ரீதேவி தட்டிக்கேட்டுள்ளார். இதனால் இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று மீண்டும் இவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த, முருகன், மனைவியை கட்டையால் தாக்கினார். அதில், பலத்த காயமடைந்த, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதலியார்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை