உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பைக் திருடிய நபருக்கு வலை

பைக் திருடிய நபருக்கு வலை

புதுச்சேரி: பைக் திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.விழுப்புரம் அடுத்த அத்தியூர் திருவாதியை சேர்ந்தவர் ராஜ்மோகன், 31. இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணி புரிகிறார்.இவரது சகோதரரின் பைக்யை எடுத்து கொண்டு தனது மனைவியுடன் கடந்த 22ம் தேதி புதுச்சேரிக்கு வந்தார்.ரோமன் ரோலண்ட் வீதி சாலையோரத்தில் நிறுத்தி விட்டு கடற்கரைக்கு சென்று விட்டு வந்து பார்த்த போது, பைக்கை காணவில்லை. பல இடங்களில் தேடியும் பைக் கிடைக்கவில்லை. புகாரின் பேரில் பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ