உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புது மாப்பிள்ளையின் பைக் திருட்டு 

புது மாப்பிள்ளையின் பைக் திருட்டு 

புதுச்சேரி, : மனைவியுடன் சுற்றுலா வந்த புது மாப்பிள்ளையின் பைக் திருடுபோனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம் அத்தியூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்மோகன், தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன் திருமணம் நடந்தது.ராஜ்மோகன் தனது மனைவி சாவித்திரியை அழைத்து கொண்டு பைக்கில் புதுச்சேரிக்கு கடந்த 29ம் தேதி வந்தார். பைக்கை பாரதி பூங்கா எதிரில் நிறுத்திவிட்டு கடற்கரைக்கு சென்று விட்டு திரும்ப வந்து பார்த்த போது அவரது புது பைக்கை காணமால் அதிர்ச்சியடைந்தார். புகாரின் பேரில் பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ