மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
19 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
19 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
19 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
19 hour(s) ago
புதுச்சேரி : வெயில் தாக்கத்திலிருந்து பொதுமக்களை காக்க வேண்டும் என, எதிர்கட்சித்தலைவர் சிவா கோரிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை: புதுச்சேரியில் ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோயாளிகள் அதிகம் உள்ளனர். காலை 8:00 மணிக்கு வரும் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருந்து டாக்டரை சந்தித்து மாத்திரைகள் வாங்க மதியம், 1:00 மணி வரை ஆகிறது.தற்போது வெயிலின் தாக்கத்தால் அவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. சுகாதாரத்துறை அந்தந்த பகுதியில் உள்ள தாய் சேய் துணை நிலையத்தில் மருந்து மாத்திரைகளை வழங்க வேண்டும்.குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதையும், தாய்மார்களை பரிசோதிப்பதையும் காலை 8:00 மணிக்கு துவங்கி 11:00 மணிக்குள் முடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.சுகாதாரத்துறை மூலம், ஓ.ஆர்.எஸ் பாக்கெட்டுகளை, பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். வெயிலில் இருந்து பொதுமக்கள் பாதுகாத்துக் கொள்வது குறித்து அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago