உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முத்தியால்பேட்டை கோவிலில் பங்குனி உத்திர விழா

முத்தியால்பேட்டை கோவிலில் பங்குனி உத்திர விழா

புதுச்சேரி : முத்தியால்பேட்டை சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழா நாளை நடக்கிறது.இதையொட்டி, காலை 7:00 மணிக்கு தேவஸ்தான பூந்தோட்டத்தில் காவடி அபிேஷகம், தொடர்ந்து காவடி, பால் குட வீதி உலா நடக்கிறது. இதையடுத்து சுப்ரமணியர் மற்றும் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் நடக்கிறது. இடும்பனுக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு மின் அலங்காரத்துடன், சுவாமி வீதி உலா நடக்கிறது. ஏற்பாடுகளை தேவஸ்தான நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ