| ADDED : ஜூலை 04, 2024 03:32 AM
புதுச்சேரி : சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி,இரண்டாவது தேசிய நீதிபதிகள் சம்பள கமிஷன்பரிந்துரைகளை அமல்படுத்தவேண்டும் என, ஓய்வுபெற்ற நீதிபதிகள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.புதுச்சேரி மாநில ஓய்வுபெற்ற நீதிபதிகள் நலச் சங்கத்தின் தலைவர் முருகபூபதி, துணை தலைவர் பேட்ரிக் ஜார்ஜ், செயலாளர் சித்தார்த்தர், பொருளாளர் மார்கரெட் ரோசலின் ஆகியோர் தலைமைச்செயலாளர் சரத் சவுகான், சட்டத்துறை செயலாளர் சத்தியமூர்த்தி ஆகியோரை சந்தித்து பேசினர்.அப்போது இருவரிடமும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு நகல் கடந்த ஜனவரி1ம் தேதியின்படி, பணியிலிருக்கும் நீதிபதிகள், ஓய்வுபெற்ற நீதிபதிகள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள்ஆகியோருக்கு இரண்டாவது தேசிய நீதிபதிகள் சம்பள கமிஷன் மூலம் அவர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகள் அனைத்தையும் கடந்த பிப்ரவரி29ம் தேதிக்குள் வழங்க உத்தரவிட்டது.இந்த உத்தரவை,புதுச்சேரி அரசு நடைமுறைபடுத்தவில்லை. எனவே,சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை உடனே அமல்படுத்த வேண்டும் என, மனு அளித்து கேட்டுக் கொள்ளப்பட்டது. மனுவைபெற்றுக்கொண்ட தலைமைச்செயலர், சட்டத்துறை செயலர், இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகஉறுதியளித்தனர்.