உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஜீவானந்தபுரம் ஓடையில் அடித்து சென்ற வாலிபரை 2ம் நாளாக தேடும் பணி தீவிரம்

ஜீவானந்தபுரம் ஓடையில் அடித்து சென்ற வாலிபரை 2ம் நாளாக தேடும் பணி தீவிரம்

புதுச்சேரி : ஜீவானந்தபுரம் ஓடை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாலிபரை தேடும் பணி நேற்று 2வது நாளாக நடந்தது.புதுச்சேரியில் நேற்று முன்தினம் இரவு திடீரென கொட்டிய மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேடான பகுதியில் இருந்து தாழ்வான பகுதிக்கு இறங்கும் ஜீவானந்தபுரம் ஓடையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.அப்போது, ஓடை மீதுள்ள பாலத்தில் கடக்க முயன்ற ஜீவானந்தபுரம், அன்னை பிரியதர்ஷினி நகரைச் சேர்ந்த அய்யப்பன், 38; என்பவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். கோரிமேடு போலீசார், தீயணைப்பு துறையினர் நேற்று முன்தினம் 10:30 மணி முதல் அதிகாலை 3:00 மணி வரை தேடும் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக இரவு 11:30 மணிக்கு, கலெக்டர் குலோத்துங்கன் தேடும் பணியை ஆய்வு செய்தார். அதன்பின்பு நேற்று காலை 2வது நாளாக மீண்டும் தேடுதல் பணி துவங்கியது.ஜீவானந்தபுரம், கொக்குபார்க், வினோபா நகர், வேலன் நகர், சாரம் வெங்கடேஸ்வரா நகர், ஜீவா நகர் மற்றும் உப்பனாறு பகுதியில் தேடுதல் பணி நடந்தது. தீயணைப்பு துறையினர் இரு குழுக்களாக பிரிந்து தேடும் பணியில் ஈடுப்பட்டனர்.கொக்குபார்க் சிக்னல் பாலத்தின் கீழ் உள்ள மணலில் புதைந்து இருக்கலாம் என தகவல் கிடைத்தால், இட்டாச்சி இயந்திரம் மூலம் மணலை தோண்டி எடுத்து தேடினர். வைத்தியநாதன் எம்.எல்.ஏ., உப்பனாறு வாய்க்கால் மற்றும் கொக்குபார்க் பகுதியில் தேடும் பணியை துாரிதப்படுத்த ஏற்பாடு செய்தார். நேற்று இரவு 9:00 மணி வரை தேடியும் அய்யப்பன் கிடைக்கவில்லை.

புரளி

கொக்கு பார்க் பாலத்தின் கீழ் இட்டாச்சி இயந்திரம் மூலம் மணல் தோண்டி தேடும் பணி நடந்து கொண்டிருந்தபோது, அய்யப்பன் உடல் முருகா தியேட்டர் பாலத்தில் கிடைத்து விட்டதாக அவரது உறவினர்களுக்கு யாரே தகவல் கூறியுள்ளனர். இதனால் அய்யப்பன் உறவினர்கள் திடீரென முருகா தியேட்டர் நோக்கி ஓடினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் சென்று மடக்கி விசாரித்தபோது அது புரளி என தெரியவந்தது.

இருவர் தப்பினர்

நேற்று முன்தினம் இரவு அய்யப்பனுடன், சந்துரு, பாலு ஆகிய இருவரும் தண்ணீர் அடித்து சென்று விட்டதாக தகவல் பரவியது. சம்பவ இடத்திற்கு வந்த கோரிமேடு இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்இன்ஸ்பெக்டர் ரமேஷ் மூவரையும் தேடும் பணியில் இறங்கினர்.போலீசாருடன் அப்பகுதி இளைஞர்கள் சிலரும் தேடினர். போலீசாருக்கு பின்னால் மழையில் நனைந்தபடி நின்ருந்த வாலிபரை பார்த்து மற்ற வாலிபர்கள் 'டேய் சந்துரு இங்க தான் இருக்கிறாயா, உன்னை தாண்டா தேடுகிறோம்' என கத்தினர். சந்துருவிடம் விசாரித்தபோது, அய்யப்பன் தண்ணீரில் அடித்து செல்வதை பார்த்து சந்துரு காப்பாற்ற முயற்சித்துள்ளார். அப்போது, ஓடையில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் சந்துருவும் அடித்து செல்லப்பட்டுள்ளார்.சிறிது துாரம் தண்ணீரில் தத்தளித்து சென்றபோது, சாலையோரம் இருந்த கம்பத்தை பிடித்து கொண்டு காப்பாற்றுங்கள் என சத்தம் எழுப்பி உள்ளார். அங்கிருந்த பெண் ஒருவர் சந்துருவை காப்பாற்றியது தெரியவந்தது. உடனடியாக சந்துருவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி முதல் றுஉதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.பாலு என்பவரை காணவில்லை என்று கூறியதால், அவரது வீட்டிற்கு போலீஸ் சென்று பார்த்தபோது, பாலு வீட்டில் துாங்கி கொண்டிருப்பது தெரிந்து போலீசார் நிம்மதி பெரு மூச்சி விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ