உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்

வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்

புதுச்சேரி: புதுச்சேரி காந்தி வீதி பெருந்தேவி நாயகி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் 38ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 14ம் தேதி துவங்கியது.இதையொட்டி, தினமும் காலை 10:30 மணிக்கு சிறப்பு திருமஞ்சனமும், இரவு 7:30 மணிக்கு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக, நேற்று முன்தினம் காலை 10:30 மணிக்கு வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனமும், இரவு 7:30 மணிக்கு தங்க கருட சேவை சுவாமி வீதியுலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்து, நேற்று காலை 10:30 மணிக்கு திருமஞ்சனமும், மாலை 4:௦௦ மணிக்கு சுவாமி திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. வரும் 23ம் தேதி காலை 7:30 மணிக்கு திருத்தேர் புறப்பாடும், 28ம் தேதி இரவு 7:00 மணிக்கு சுவாமி ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை