மேலும் செய்திகள்
மகளிர் தினத்தை முன்னிட்டு ஓவியக் கண்காட்சி
1 hour(s) ago
குண்டர் சட்டத்தில் ரவுடி கைது
1 hour(s) ago
பிரசார வாகனங்களை தேர்தல் அதிகாரிகள் ஆய்வு
1 hour(s) ago
போதைப் பொருள் தடுப்பு முகாம்
1 hour(s) ago
புதுச்சேரி, : தவளகுப்பம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தேசிய காச நோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.கிராமப்புற செவிலியர் ஜெயசாந்தினி வரவேற்றார். நிலைய மருத்துவ அதிகாரிகள் மீனு, செல்வநாயகி தலைமை தாங்கி, காசநோய் பரவும் விதம் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து பேசினர். நோய்க்கான சிகிச்சை மருந்துகள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுவதாக தெரிவித்தனர்.கிராமப்புற செவிலிய மேற்பார்வையாளர் பவுனம்பாள், சுகாதார உதவி ஆய்வாளர்கள் ஜவகர், இளஞ்செழியன், கவுன்சிலர் ஹரிதாஸ் முன்னிலை வகித்தனர். செவிலியர் கலாவதி நன்றி கூறினார்.தொடர்ந்து, மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை ஆஷா பணியாளர்கள் சாந்தி, புவனா ஆகியோர் செய்திருந்தனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago